June 22, 2020

அறிய வேண்டியவை-பதிவு-33


              ஜபம்-பதிவு-525
         (அறிய வேண்டியவை-33)

உத்தரை :
“முனிவர் ஒருவர்
எனக்கு
மாயக்கண்ணாடி
ஒன்றை பரிசாகக்
கொடுத்தார் ;
அந்த மாயக்கண்ணாடி
முன்னால் வந்து
யார் நிற்கிறாரோ
அவருடைய
மனதில் யார்
இருக்கிறாரோ
அவருடைய
உருவம்
தெரியும்”

“என்னுடைய
கணவர் மனதில்
யார் இருக்கிறார்
என்பதை அறிந்து
கொள்ளும்
ஆவலில்
மாயக்கண்ணாடி
முன்னால் வந்து
நில்லுங்கள்
என்றேன் “

திரௌபதி :
“நின்றாரா?”

உத்தரை :
“நின்றார்”

திரௌபதி :
“தெரிந்து
கொண்டாயா?”

உத்தரை :
“தெரிந்து
கொண்டேன்”

திரௌபதி :
”யார்
தெரிந்தார்கள்”

(உத்தரை
வெட்கத்தால்
தலை குனிந்தாள் )

திரௌபதி :
“அபிமன்யுவின்
மனதில் யார்
இருக்கிறார்
என்பதை
மாயக்கண்ணாடி
வைத்தா தெரிந்து
கொள்ள வேண்டும்”

உத்தரை :
“சும்மா
விளையாடினேன்”

திரௌபதி :
“உங்கள்
விளையாட்டிற்கு
அளவே
இல்லாமல்
போய் விட்டது

(பஞ்ச பாண்டவர்கள்
அனைவரும்
சிரிக்கின்றனர்;

அப்போது
கிருஷ்ணன்
அந்த அறைக்குள்
வருகிறார்)

கிருஷ்ணன் :
“அனைவரும்
சந்தோஷமாக
இருக்கிறீர்கள்
போல இருக்கிறது
நானும்
அதில் கலந்து
கொள்ளலாமா?”

“என்ன விஷயம்
அனைவரும்
சிரிப்பில் மிதந்து
கொண்டிருக்கிறீர்கள்”

திரௌபதி :
“பரந்தாமா
உத்தரைக்கு
முனிவர் ஒருவர்
மாயக்கண்ணாடி
ஒன்றை பரிசாகக்
கொடுத்து
இருக்கிறார் ;
அந்த மாயக்கண்ணாடி
முன்னால் வந்து
யார் நிற்கிறாரோ
அவருடைய
மனதில் யார்
இருக்கிறாரோ
அவருடைய
உருவம் தெரியும்
அதைப் பற்றித்
தான் பேசிக்
கொண்டிருந்தோம்
நீங்கள்
வந்து விட்டீர்கள் “

“நீங்கள் அந்த
மாயக்கண்ணாடி
முன்னால்
வந்து நில்லுங்கள்
உங்கள் மனதில்
யார் இருக்கிறார்
என்பதைப்
பார்த்து
விடலாம்”

அர்ஜுனன் :
“பரந்தாமன்
கிருஷ்ணன்
மனதில் யார்
இருப்பார்கள்
நான் தான்
இருப்பேன்
என்னைத் தவிர
வேறு யார்
இருப்பார்கள்”

பீமன் :
“நான் தான்
பரந்தாமன்
கிருஷ்ணனுக்கு
பிடித்தவன்
என்னைத் தவிர
வேறு யாரும்
இருக்க
மாட்டார்கள்”

தர்மர் :
“நான் தான்
தெரிவேன் “

திரௌபதி :
“என்னை விட்டால்
வேறு யாரும்
பரந்தாமன்
கிருஷ்ணன்
மனதில் யாரும்
இருக்க
மாட்டார்கள் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 22-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment