June 22, 2020

அறிய வேண்டியவை-பதிவு-34


              ஜபம்-பதிவு-526
        (அறிய வேண்டியவை-34)

(அனைவரும்
கிருஷ்ணன் மனதில்
தாங்கள் தான்
இருப்போம் ;
தாங்கள் தான்
இருப்போம் - என்று
ஒருவொருக்கொருவர்
சண்டையிட்டுக்
கொண்டு இருந்தனர்)

தர்மர் :
“கிருஷ்ணா எங்களுக்குள்
ஏற்பட்ட சண்டை தீர
வேண்டுமானால்
நீங்கள் மாயக்கண்ணாடி
முன்னால் வந்து
நிற்கத் தான் வேண்டும்”

கிருஷ்ணன் :
“நாம் எந்த விஷயத்தைத்
தெரிந்து கொள்ள
வேண்டுமோ - அந்த
விஷயத்தைத் தான்
தெரிந்து கொள்ள வேண்டும்”

“எந்த விஷயத்தைத் தெரிந்து
கொள்ளக் கூடாதோ
அந்த விஷயத்தைத்
தெரிந்து கொள்ள முயற்சி
செய்யக் கூடாது”

“இந்த விஷயமும்
அப்படித் தான் தெரிந்து
கொள்ளாமல் இருப்பது
நன்மை பயக்கும்”

திரௌபதி :
“நீங்கள் மாயக்கண்ணாடி
முன்னால் நின்று தான்
ஆக வேண்டும்  ;
உங்களுடைய மனதில்
யார் இருக்கிறார்கள்
என்பதை நாங்கள் தெரிந்து
கொள்ள ஆசைப்படுகிறோம் “

(அனைவருடைய
வற்புறுத்தலினால்
கிருஷ்ணன் மாயக்
கண்ணாடி முன்னால்
வந்து நின்றார்
மாயக்கண்ணாடியில்
சகுனி தெரிந்தார்)

அர்ஜுனன் :
“என்னது சகுனியா
என்ன மாய வித்தை
இது கிருஷ்ணா?”

சகாதேவன் :
“கிருஷ்ணா மாயம்
ஏதேனும் செய்கிறீர்களா?”

நகுலன் :
“நீங்கள் மாயம் செய்வதன்
காரணம் என்ன”

கிருஷ்ணன் :
“நான் தான் முன்பே
வேண்டாம் என்று
சொன்னேன் - நீங்கள்
தான் வற்புறுத்தினீர்கள்
நான் நின்றேன் ;
இப்போது நான் மாயம்
செய்கிறேன் என்கிறீர்கள் “

திரௌபதி :
“பரந்தாமா உண்மையைச்
சொல்லுங்கள்”

கிருஷ்ணன் :
“மாயக்கண்ணாடியில்
சகுனி தெரிவது
உண்மை தான்  
நான் எந்தவிதமான
மாயமும் செய்யவில்லை”

“என்னை அழிப்பதற்காக
திட்டங்களைத் தீட்டி
என்னையே நினைத்துக்
கொண்டிருப்பவன் சகுனி”

“நான் என்ன திட்டம்
தீட்டப் போகிறேன் ;
அதனை எப்படி
செயல் படுத்தப்
போகிறேன் ; என்பதை
சிந்தித்து அதனை
எதிர்கொள்வதற்கு
எத்தகைய
தீட்டங்களைத் தீட்டலாம்
என்பதை யோசித்து
எனக்கு எதிராக
திட்டங்களைத் தீட்டிக்
கொண்டிருப்பவன் சகுனி”

“நான் என்ன
செய்யப் போகிறேன்
என்பதை அறிந்து
கொள்வதற்காக
தூக்கத்தில் கூட
என்னையே சிந்தித்துக்
கொண்டிருப்பவன் சகுனி”

“மற்றவர்கள் அனைவரும்
துன்பம் வந்தால்
மட்டும் தான் என்னை
நினைப்பார்கள்”

“ஆனால் சகுனி
அப்படி அல்ல
இன்பத்தில் இருந்தாலும்
துன்பத்தில் இருந்தாலும்
என்னை வீழ்த்துவது
ஒன்றையே வாழ்க்கையின்
குறிக்கோளாகக் கொண்டு
எனக்கு எதிராக
சதித் திட்டங்களை
தீட்டுவதற்காக
நான் என்ன
செய்யப் போகிறேன்
என்பதை
சதாசர்வ காலமும்
யோசித்துக் கொண்டு
என்னையே சிந்தித்துக்
கொண்டிருக்கிறான் சகுனி”

“என்னை எப்படி
எண்ணுகிறார்கள்
என்பது முக்கியமல்ல  ;
கணநேரமும் என்னை
மறக்காமல் இருப்பவர்கள்
யார் என்பது
தான் முக்கியம்”

“என்னை கணநேரமும்
மறக்காமல் இருப்பவர்கள்  
என்னுடைய
மனதில் இருப்பவர்கள் “

“அதனால் தான்
சகுனி என்
மனதில் இருக்கிறான்”

“உயர்ந்தவர் தாழ்ந்தவர்
ஏழை பணக்காரர்
படித்தவர் படிக்காதவர்
நல்லவர் கெட்டவர்
என்ற பேதம் இல்லாமல்
யாராக இருந்தாலும்
இறைவனை
சதா காலமும்
சிந்தித்துக்
கொண்டிருந்தால்
இறைவனுடைய
மனதில்
அவர் இருப்பார்
என்பதே
இந்தக் கதையின்
மூலம் நாம்
அறிய வேண்டிய
உண்மை ஆகும் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 22-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment