June 22, 2020

திருக்குறள்-நிறைநீர-பதிவு-2


               திருக்குறள்-நிறைநீர-பதிவு-2

“பணம் நஷ்டம்
ஏற்பட்டால்
என்ன செய்வாய்
கடன் அதிகம்
ஏற்பட்டால்
என்ன செய்வாய்”

“நீ செய்யும்
காரியத்தால்
குடும்பம்
துன்பத்தில்
உழன்றால்
என்ன செய்வாய்
என்று அறிவுரை
என்ற பெயரில்
அவர்கள் நம்மை
காயப்படுத்துவார்கள்;”

“நம்முடைய
மனதை
வருத்தப்பட
வைப்பார்கள் ;”

“நம்முடைய
தைரியத்தை
வலுவிழக்கச்
செய்வார்கள் ;”

“நம்முடைய
உள்ளத்தை
கலக்கம் அடையச்
செய்வார்கள் ;”

“நம்முடைய
நெஞ்சத்தைப்
பிளப்பார்கள்;”

“அவர்கள்
சொல்லும்
வார்த்தைகள்
பாம்பு கொத்துவது
போல் இருக்கும்”

“இதை எல்லாம்
கடந்து
நாம் பல்வேறு
கஷ்டங்களையும்
கடந்து கடுமையாக
உழைத்து
தொழிலைச் செய்து
கொண்டிருக்கிறோம் “

“தொழில்
நன்றாக சென்று
கொண்டிருக்கிறது ;
தொழில் நன்றாக
சென்று
கொண்டிருக்கும்
வரை அமைதியாக
இருக்கும்
அறிவுரை சொல்வது
குறை சொல்வது
ஆகிய இரண்டு
செயல்களைச்
செய்பவர்கள் ;
தொழில் சற்று
கஷ்டமான நிலைக்கு
தள்ளப்பட்டு
கடன் வாங்கி
செய்யக்கூடிய நிலை
வரும் போது
குறை சொல்ல
ஆரம்பித்து விடுவார்கள்”

“நன்றாக தொழில்
செய்த போது
பாராட்ட வராமல்
பொறாமையால் மனம்
வெதும்பியவர்கள்
தொழிலில் நஷ்டம்
ஏற்பட்ட போது
ஓடி வருவார்கள்”

“நான் அப்போதே
சொன்னேன்”

“இது எல்லாம்
உனக்கு
தேவையா என்று”

“நீ என்னுடைய
பேச்சை
கேட்கவில்லை;

நீ என்னுடைய
பேச்சை
மதிக்கவில்லை ;”

“என்னுடைய
பேச்சை
கேட்டிருந்தால்
இத்தகைய ஒரு
நிலை உனக்கு
ஏற்பட்டிருக்காது”

“என்னுடைய
பேச்சை கேட்டால்
வாழ்க்கையில்
நன்றாக
இருப்பார்கள்”

“என்னுடைய
பேச்சை
கேட்டவர்கள்
அனைவரும்
வாழ்க்கையில்
நன்றாக
இருக்கிறார்கள்”

“என்னுடைய
பேச்சை
கேட்காதவர்கள்
தான் வாழ்க்கையில்
நன்றாக இல்லை”

“நீயும் என்னுடைய
பேச்சை
கேட்கவில்லை”

“உன்னுடைய
இந்த நிலைக்கு
என்னுடைய
பேச்சை
கேட்காததே
காரணம்”

“என்று வசைமாரி
பொழிந்து
குறை சொல்வார்கள்”

“அறிவுரை சொல்வது
குறை சொல்வது
ஆகிய இரண்டு
செயல்களைச்
செய்பவர்கள்
புதிய தொழிலைத்
தொடங்கும் போது
அறிவுரை
சொல்வார்கள்
தொழிலில்
நஷ்டம் ஏற்படும்
போது குறை
சொல்வார்கள்
இந்த இரண்டு
செயலைத் தான்
செய்வார்கள் “

-----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்

-----------22-06-2020
/////////////////////////////////////////

No comments:

Post a Comment