June 22, 2020

அறிய வேண்டியவை-பதிவு-31


               ஜபம்-பதிவு-523
          (அறிய வேண்டியவை-31)

உத்தரை :
“என் மனதில்
யார் இருப்பார்கள்
என்று உங்களுக்குத்
தெரியாதா?”

“தெரியாதது
போல்
நடிக்கிறீர்கள்”

“நல்ல நடிகர்
தான் நீங்கள்”

“நானே
என்னுடைய
வாயால் சொல்ல
வேண்டும் என்று
ஆசைப்படுகிறீர்கள்
அப்படித்தானே!”

“நானே
சொல்கிறேன்”

“என்னுடைய
உயிரிலும்
உணர்விலும்
உள்ளத்திலும்
கலந்து இருப்பது
நீங்கள்
மட்டும் தான்”

“என்னுடைய
நினைவில்
நீங்காமல்
இருப்பதும் ;
என்னுடைய
சிந்தனையில்
சிதறாமல்
இருப்பதும் ;
என்னுடைய
மனதில்
மங்காமல்
இருப்பதும் ;
என்னுடைய
உள்ளத்தில்
உருவமாக
இருப்பதும் ;
என்னுடைய
உயிரில்
உறவாடிக்
கொண்டு
இருப்பதும் ;
என்னுடைய
வாழ்க்கையில்
வாழ்ந்து
கொண்டு
இருப்பதும் ;
நீங்கள் தான்”

“அப்படி இருக்கும்
போது நான்
மாயக்கண்ணாடி
முன்னால்
நின்றால்
உங்களைத்
தவிர வேறு
யார் தெரிவார்கள்”

அபிமன்யு :
“எனக்குத்
தெரியும்
சும்மா
விளையாடிப்
பார்த்தேன்”

உத்தரை :
“விளையாடுவதற்கு
நான் என்ன
விளையாட்டுப்
பொருளா?”

அபிமன்யு :
“விளையாட்டுப்
பொருள்களுடன்
தான் விளையாட
வேண்டுமா ?”

“நமக்கு
அன்பானவர்களுடன் 
விளையாடக்
கூடாதா………………? “

“நமக்கு
பிரியமானவர்களுடன்
கொஞ்சி மகிழக்
கூடாதா……………?”

“விழி காட்டி
விழியின்
மொழி காட்டி ;

சொல் காட்டி
சொல்லின்
பொருள் காட்டி ;

நகை காட்டி
நகைப்பில்
இன்பம் காட்டி ;

நடை காட்டி
நடையில்
நளினம் காட்டி ;

இடை காட்டி
இடையில்
இலக்கணம் காட்டி ;

எனை ஏங்க
வைத்தவளே!

நரம்பைத் தொலைத்த
இந்த வீணை
விரல்களின்
மீட்டலுக்காக
ஏங்கிக் கிடக்கிறது !

துளையைத்
தொலைத்த - இந்த
புல்லாங்குழல்
தென்றலின்
வருகைக்காக
சுவாசப்பையை
சுத்தமாக
வைத்திருக்கிறது !

விடியலைத்
தேடும் நான்
காலத்தைத்
தொலைத்து விட்டு
எண்ணத்தை
விழிகளில் எழுதி
வைத்திருக்கிறேன்!

இதயத்தில்
ஏற்றி வைத்த
என் காதலை
எண்ணத்தில்
எழுதி வைத்து
இரத்தத்தில் கலந்து
வைத்திருக்கிறேன்!

என் இதயத்
தோட்டத்தில்
பூத்திருக்கும்
வாடாமலரான
உன்னுடன்
விளையாடாமல்
வேறு யாருடன்
விளையாடுவேன்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 22-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment