February 18, 2022

ஜபம்-பதிவு-686 (சாவேயில்லாத சிகண்டி-20)

 ஜபம்-பதிவு-686

(சாவேயில்லாத

சிகண்டி-20)

 

பீஷ்மர் :

அழைப்பிதழ் அனுப்பாததால்

அழைக்காமல்

வந்திருக்கிறேன்

காசி நாட்டு மன்னா

 

பீமதேவன் :

அழைக்காத இடத்திற்கு

செல்வது மரியாதை

கிடையாது என்பது

பீஷ்மருக்கு மட்டும்

தெரியாதா

அல்லது

அஸ்தினாபுரத்திற்கே

தெரியாதா

 

பீஷ்மர் :

மரியாதை என்றால்

என்ன என்று

தெரியாதவர்களுக்கு

மரியாதையை கற்றுக்

கொடுக்க வந்திருக்கிறேன்

 

மரியாதை என்றால்

என்ன என்பதை

காசி நாட்டு

மன்னனுக்கு

மட்டும்

கற்றுக் கொடுத்தால்

போதுமா

அல்லது

காசி நாட்டிற்கே

கற்றுத் தர

வேண்டுமா

 

பீமதேவன் :

கற்றுக் கொள்ள

வேண்டிய அவசியமும்

எங்களுக்கு இல்லை

 

ஏனென்றால்

மரியாதை என்றால்

என்ன என்று

எங்களுக்குத் தெரியும்

 

பீஷ்மர் :

மரியாதை தெரிந்து

இருந்தால் சுயம்வரத்திற்கு

அழைப்பிதழ் அனுப்பாமல்

இருந்திருக்க மாட்டீர்கள்

 

பீமதேவன் :

யாருக்கு அழைப்பிதழ்

அனுப்ப வேண்டும்

 

யாருக்கு அழைப்பிதழ்

அனுப்பக் கூடாது

 

என்பது

என்னுடைய

தனிப்பட்ட விருப்பம்

 

பீஷ்மர் :

நீங்கள் மூன்று

பெண்களுக்கு ஒரு

தந்தையாக

இருந்திருந்திருந்தால்

அழைப்பிதழ்

அனுப்புவதும்

அனுப்பாததும்

உங்களுடைய தனிப்பட்ட

விருப்பமாக

இருந்திருக்கலாம்

 

ஆனால் நீங்கள்

மூன்று

இளவரசிகளின் தந்தை

காசி நாட்டின் மன்னர்

 

மன்னர் பிள்ளைகளின்

திருமணம் நாடுகள்

சம்பந்தப்பட்டது

என்பதை மறந்து

விட்டீர்கள்

 

அஸ்தினாபுரம் இரத்த

சம்பந்தமுள்ள

உறவு நாடு

என்பதை மறக்காமல்

இருந்திருந்தால்

அழைப்பிதழ் அனுப்பி

இருப்பீர்கள்

 

அஸ்தினாபுரம்

இரத்த சம்பந்தமுள்ள

உறவு நாடு

என்பதை

மறந்து விட்டீர்கள்

 

அதனால் அழைப்பிதழ்

அனுப்பவில்லை

 

(பீமதேவனுக்கு

அமைச்சர் சொன்னது

தன்னுடைய நினைவுக்கு

வருகிறது.

பீமதேவனும், அமைச்சரும்

ஒருவரை ஒருவர்

பார்த்துக் கொண்டனர்)

 

பீமதேவன் :

நான் எதையும்

மறக்க வில்லை

உறவை புதுப்பித்துக்

கொள்ள விரும்பவில்லை

அதனால் தான்

அழைப்பிதழ்

அனுப்பவில்லை

 

பீஷ்மர் :

ஆனால்,

என்றுமே அஸ்தினாபுரம்

எந்த உறவையும்

அறுக்க விரும்பியதில்லை

 

பீமதேவன் :

அஸ்தினாபுரத்தின்

உறவே வேண்டாம்

என்று முடிவெடுத்து

விட்ட பிறகு

உறவைப்பற்றி பேச

நான் விரும்பவில்லை

 

நீங்கள்

ஏன் வந்திருக்கிறீர்கள்

 

எதற்காக வந்திருக்கிறீர்கள்

 

என்ன காரணத்திற்காக

வந்திருக்கிறீர்கள்

 

அமைதியாக நடந்து

கொண்டிருக்கும் விழாவை

சீர்குலைக்க வேண்டும்

என்ற எண்ணத்தில்

வந்திருக்கிறீர்களா

 

அல்லது

 

மகிழ்ச்சியுடன் நடந்து

கொண்டிருக்கும்

நிகழ்ச்சியினை

மகிழ்ச்சியற்று

ஆக்க வேண்டும்

என்ற எண்ணத்தில்

வந்து இருக்கிறீர்களா

 

அழையாத இடத்திற்கு

முறையற்று ஏன்

வந்திருக்கிறீர்கள்

 

----------- ஜபம் இன்னும் வரும்

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------18-02-2022

-------------வெள்ளிக் கிழமை

/////////////////////////////////

 

No comments:

Post a Comment