February 18, 2022

ஜபம்-பதிவு-696 (சாவேயில்லாத சிகண்டி-30)

 ஜபம்-பதிவு-696

(சாவேயில்லாத

சிகண்டி-30)

 

அம்பை :

காதலின் வலிமை

தெரியாமல் பேசுகிறீர்கள்

 

பீஷ்மர் :

காதலின் வலிமையை

எப்படி தெரிந்து

கொள்வது

 

அம்பை :

சால்வன் என்னை

ஏற்றுக் கொள்வதில்

இருந்து

தெரிந்து கொள்வீர்கள்

 

பீஷ்மர் :

நடக்கப்போவதை

நான் மட்டுமல்ல

காலமும் தான்

பார்க்கப் போகிறது

 

அம்பை :

பாருங்கள்

நன்றாகப் பாருங்கள்

பார்த்துக்

கொண்டே இருங்கள்

 

பீஷ்மர் :

யார் அங்கே

 

(பீஷ்மர் காவலாளியைக்

கூப்பிடுகிறார்

 

காவலாளி ஓடி வந்து

அவர் முன்னால்

நிற்கிறான்

 

சௌபால

நாட்டு அரசர்

சால்வனை

சந்திப்பதற்காகச்

செல்லும்

இளவரசி

அம்பையை

சௌபால நாட்டில்

பத்திரமாக

விட்டு விட்டு

வாருங்கள்

 

காவலாளி :

அப்படியே ஆகட்டும்

 

(பீஷ்மர் அம்பையைப்

பார்த்து பேசுகிறார்)

 

பீஷ்மர் :

நீங்கள் கிளம்பலாம்

 

(அம்பை பீஷ்மரை

பார்த்து விட்டு

நடந்து செல்கிறாள்

 

அம்பை நடந்து

செல்வதை பீஷ்மர்

பார்த்துக் கொண்டு

இருந்தார்

 

சௌபால நாட்டு

மன்னன் சால்வனைச்

சந்திப்பதற்காக

அம்பை தேரில்

ஏறி சென்று

கொண்டிருந்தாள்

 

அம்பை சாதாரண

பெண் அல்ல

 

இந்த அம்பையின்

கைகளில் தான்

பீஷ்மரின் உயிரே

இருக்கிறது

 

சாகாத மனிதருக்கு

சாவைத் தரப்போகிறவர்

தான் இந்த அம்பை

 

யாராலும் வீழ்த்த

முடியாத பீஷ்மரை

வீழ்த்தப் போகிறவர்

தான் இந்த அம்பை

 

பீஷ்மருக்கு இறப்பைத்

தரப்போகிறவர்

தான் இந்த அம்பை

 

குருஷேத்திரப் போரின்

போக்கையே மாற்றி

அமைக்கப் போகிறவர்

தான் இந்த அம்பை

 

அம்பை சிகண்டியாக

மாறி செலுத்தும்

அம்பினால் தான்

குருஷேத்திரப் போரில்

பீஷ்மர்

இறக்கப் போகிறார்

 

யாராலும் வீழ்த்த

முடியாத

பீஷ்மரை வீழ்த்தி

வல்லவனுக்கு

வல்லவன் இந்த

அவனியில் உண்டு

என்று

நிரூபிக்கப் போகிறவர்

தான் இந்த அம்பை

 

மரணமற்றவரும்

அழிவில்லாதவரும்

யாராலும் அழிக்க

முடியாதவரும்

விருப்பப்படும் போது

மட்டுமே

மரணம் நிகழும்

என்ற வரத்தைப்

பெற்றவரும்

ஆகிய பீஷ்மரை

மரணமடையச் செய்ய

வேண்டும்

என்பதற்காகவே

தவம் செய்து

வரத்தைப் பெற்று

அம்பை

சிகண்டியாக மாறி

குருஷேத்திரப் போரில்

பீஷ்மரின் நெஞ்சைத்

துளைக்கும்

அம்பை விட்டு

பீஷ்மரின் இறப்புக்குக்

காரணமாக

இருக்கப்போகும் அம்பை

சால்வனைச்

சந்திப்பதற்காக சென்று

கொண்டிருக்கிறார்

 

அம்பையின் வாழ்க்கையை

சுருக்கமாக சொல்லி

விடலாம்

அதாவது

அம்பைக்கும் பீஷ்மருக்கும்

பகை உண்டானது

பீஷ்மரைக் கொல்வதற்காக

அம்பை வரம் பெற்றாள்

கிகண்டியாக மாறி

குருஷேத்திரப் போரில்

பீஷ்மரைக் கொன்றாள்

 

படிப்பதற்கு சுருக்கமாக

இருக்கிறது

 

அம்பையின் பின்னால்

உள்ள கதைகளை

தெரிந்து கொள்ள வேண்டும்

என்றால் நாம்

அம்பையின் பின்னால்

சென்று தான்

ஆக வேண்டும்

 

அம்பை சௌபால

நாட்டு மன்னன்

சால்வனைச் சந்திக்க

தேரில் ஏறி சென்று

கொண்டிருக்கிறாள்

நாமும் அம்பையைத்

தொடர்ந்து செல்வோம்

 

நடப்பவைகளை

பார்ப்போம்)

 

 

----------- ஜபம் இன்னும் வரும்

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------18-02-2022

-------------வெள்ளிக் கிழமை

/////////////////////////////////



 

 

No comments:

Post a Comment