February 18, 2022

ஜபம்-பதிவு-693 (சாவேயில்லாத சிகண்டி-27)

 ஜபம்-பதிவு-693

(சாவேயில்லாத

சிகண்டி-27)

 

சத்தியவதி :

ஏன் சொல்லவில்லை

 

பீஷ்மர் :

அப்போது

சொல்லக்கூடிய நிலையில்

அவளும் இல்லையாம்

கேட்கக் கூடிய

நிலையில்

நானும் இல்லையாம்

 

சத்தியவதி :

இப்போது மட்டும்

ஏன் சொல்கிறாள்

 

பீஷ்மர் :

இப்போது சொல்லக்கூடிய

நிலையில் அவளும்

இருக்கிறாளாம்

கேட்கக் கூடிய

நிலையில் நானும்

இருக்கிறேனாம்

 

இப்போது சொல்லாமல்

விட்டால் எப்போதும்

சொல்ல முடியாதாம்

 

இப்போது சொன்னால்

தான் பல

பிரச்சினைகளுக்கு

தீர்வு காண

முடியுமாம்

 

இல்லை என்றால்

பிரச்சினைகளுக்கு

நடுவே வாழ்வை

ஓட்ட வேண்டிய

நிலை வந்து விடுமாம்

 

முடிவு ஒன்று

கிடைக்க வேண்டும்

என்றால்

உண்மையை சொல்லித்

தான் ஆக

வேண்டுமாம்

 

அதனால் உண்மையைச்

சொன்னேன் என்று

அம்பை சொல்கிறாள்

 

சத்தியவதி :

நடந்த நிகழ்வுகள்

அனைத்தையும்

பார்த்துக் கொண்டு

தானே இருந்தாள்

அப்போது எல்லாம்

வாயைத் திறக்காதவள்

இப்போது மட்டும்

ஏன் வாயைத்

திறக்கிறாள்

 

பெண்களிடம் உள்ள

பிரச்சினையே

இது தான்

 

எந்த விஷயத்தை

எப்போது

சொல்ல வேண்டும்

எந்த விஷயத்தை

எப்போது

சொல்லக் கூடாது

என்பது தெரியாது

 

சொல்ல வேண்டிய

நேரத்தில் எதை

சொல்ல வேண்டுமோ

அதை சொல்ல

மாட்டார்கள்

சொல்லக்கூடாத

நேரத்தில்

எதை சொல்லக்

கூடாதோ அதை

சொல்வார்கள்

 

பிரச்சினை

நீங்க வேண்டும் என்று

நினைத்திருந்தால்

முன்பே சொல்லி

இருப்பாள்

பிரச்சினையை

உண்டாக்க வேண்டும்

என்பதால் தான்

இப்போது சொல்கிறாள்

 

தன்னுடைய

வாழ்க்கையை எப்படி

அமைத்துக் கொள்ள

வேண்டும் என்ற உரிமை 

அவளுக்கு இருக்கிறது

தனக்குள்ள

உரிமையை

மற்றவர்களை

துன்புறுத்தாமல் பெற

வேண்டும் என்பது

அவளுக்குத்

தெரியாதா

 

பெண்களில்

பெரும்பாலோர்

இப்படித் தான்

இருக்கிறார்கள்

 

எதை எப்போது

செய்ய வேண்டும்

என்பது

தெரியவில்லை

 

பீஷ்மர் :

தாயே

 

சத்தியவதி :

நானும் ஒரு

பெண்ணாக இருந்து

அனுபவப்பட்டதால்

சொன்னேன்

 

அடுத்து என்ன செய்ய

வேண்டும் என்கிறாள்

 

பீஷ்மர் :

இரண்டு விஷயங்கள்

செய்ய வேண்டும்

என்று கேட்கிறாள்

 

சத்தியவதி :

என்ன விஷயம்

 

பீஷ்மர் :

அம்பைக்கும்

விசித்திர வீர்யனுக்கும்

நடைபெற இருக்கும்

திருமணத்தை

நிறுத்த வேண்டும்

 

சத்தியவதி :

இரண்டாவது

 

பீஷ்மர் :

சால்வனை நேரில்

சந்தித்து திருமணம்

செய்து கொள்ள

வெளியே செல்ல

அனுமதியளிக்க

வேண்டும்

 

சத்தியவதி :

நீ என்ன சொன்னாய்

 

பீஷ்மர் :

உங்களிடம் கேட்டு

விட்டு பதில்

சொல்வதாக சொன்னேன்

 

சத்தியவதி :

என்ன செய்யலாம்

என்று நினைக்கிறாய்

மகனே

 

----------- ஜபம் இன்னும் வரும்

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------18-02-2022

-------------வெள்ளிக் கிழமை

/////////////////////////////////

 

No comments:

Post a Comment