February 18, 2022

ஜபம்-பதிவு-695 (சாவேயில்லாத சிகண்டி-29)

 ஜபம்-பதிவு-695

(சாவேயில்லாத

சிகண்டி-29)

 

அம்பை நீ இப்போது

கோபத்துடனும்

உணர்ச்சிவயப்பட்ட

நிலையிலும்

இருப்பதால்

மனம் உன்னை

வழி நடத்துகிறது

இதனால் நீ எடுக்கும்

முடிவு தவறாக

இருக்கிறது

 

பொறுமையுடனும்

நிதானத்துடனும்

இரு

அறிவு உன்னை

வழிநடத்தும்

அதன் பிறகு நீ

எடுக்கும் முடிவு

சரியாக இருக்கும்

 

அம்பை :

எனக்கு

சரியாகத் தெரிவது

உங்களுக்கு

தவறாகத் தெரிகிறது

 

உங்களுக்கு சரியாகத்

தெரிவது

எனக்கு தவறாகத்

தெரிகிறது

 

சரியாகத் தெரிவதும்

தவறாகத் தெரிவதும்

அவரவர் பார்வையைப்

பொறுத்து மாறுபடுகிறது

 

என்னுடைய வாழ்க்கைக்கு

எது நல்லது

எது கெட்டது என்பதைத்

தேர்ந்தெடுக்கும் உரிமை

எனக்குத் தான்

இருக்கிறது

 

உங்களுக்கு இல்லை

 

பீஷ்மர் :

அதைத் தான் தாய்

சத்தியவதியும்

சொன்னார்கள்

 

எது நல்லது

எது கெட்டது

என்பதை ஆராய்ந்து

தன்னுடைய வாழ்க்கைக்கு

எது நல்லது

என்பதைத்

தேர்ந்தெடுக்கும் உரிமை

அம்பைக்கு மட்டும்

தான் இருக்கிறது

 

நமக்கு இல்லை

 

எனவே,

தேர்ந்தெடுக்கும்

உரிமையை

அம்பையிடமே

விட்டு விடுங்கள்

என்றார்

 

அம்பை :

தேர்ந்தெடுக்கும்

உரிமை என்றால்

 

பீஷ்மர் :

உங்கள் வாழ்க்கையை

நீங்களே

தேர்ந்தெடுக்கும் உரிமை

 

தாய் சத்தியவதி

உங்களிடம்

இரண்டு விஷயங்களைச் 

சொல்லச் சொன்னார்கள்

இரண்டில் ஒன்றை

தேர்ந்தெடுக்கும்

உரிமையை

உங்களிடமே

விட்டு விடச்

சொல்லி இருக்கிறார்கள்

 

நீங்கள் எதைத்

தேர்ந்தெடுக்கிறீர்களோ

அதை செயல்படுத்தச்

சொன்னார்கள்

 

முதலாவது

சால்வனை மறந்து

விட்டு விசித்திர

வீர்யனை திருமணம்

செய்து கொள்வதாக

இருந்தால் திருமணம்

செய்து கொள்ளலாம்

 

அம்பை :

இரண்டாவது

 

பீஷ்மர் :

சால்வனை திருமணம்

செய்ய முடிவு எடுத்து

விட்டால் அவரை

வெளியே செல்ல

அனுமதி அளிக்க

வேண்டும்

 

அம்பை :

சால்வனை திருமணம்

செய்ய என்னை

வெளியே அனுப்புங்கள்

அது போதும்

 

பீஷ்மர் :

சால்வன் உன்னை

ஏற்றுக் கொள்வான்

என்று நினைக்கிறாயா

 

அம்பை :

என்னை ஏற்றுக்

கொள்ளாமலா நீங்கள்

என்னை கடத்திக்

கொண்டு வரும் போது

உங்களை

எதிர்த்து சண்டை

போட்டார்

 

பீஷ்மர் :

அது உங்களை

சிறை எடுத்து

வரும் போது

இப்போது

 

அம்பை :

அப்போதும் சரி

இப்போதும் சரி

 

அவர் என்னைத்

தான் விரும்புவார்

 

நீங்கள் என்னைக்

கடத்தி வந்ததால்

என்னை மீட்பதற்காக

அஸ்தினாபுரத்தின் மீது

படையெடுக்க

படைகளைத் தயார்

செய்து கொண்டிருப்பார்

 

பீஷ்மர் :

அறிவு உள்ளவன்

எவனும்

அஸ்தினாபுரத்தின்

மீது படையெடுக்கத்

துணிய மாட்டான்

சால்வன் அறிவுள்ளவன்

என்று நினைக்கிறேன்

 

----------- ஜபம் இன்னும் வரும்

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------18-02-2022

-------------வெள்ளிக் கிழமை

/////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment