March 06, 2022

ஜபம்-பதிவு-697 (சாவேயில்லாத சிகண்டி-31)

 ஜபம்-பதிவு-697

(சாவேயில்லாத

சிகண்டி-31)

 

(அம்பை சௌபால

நாட்டுக்குள் பிரவேசித்து

சால்வனின் அறைக்குள்

நுழைகிறாள்.

அம்பையைப்

பார்த்தவுடன் சால்வன்

பேசத் தொடங்குகிறான்)

 

சால்வன் :

அஸ்தினாபுரத்தின்

அரசியை

வணங்குகிறேன்

 

அம்பை :

இன்னும் நான்

காசி நாட்டின்

இளவரசி தான்

 

அஸ்தினாபுரத்தின்

அரசியாகவில்லை

 

சால்வன் :

பீஷ்மர் உங்களை

சிறை எடுத்துச்

சென்றதே

விசித்திர வீர்யனை

உங்களுக்கு

திருமணம் செய்து

வைக்கத் தானே

 

உங்களை

அஸ்தினாபுரத்தின்

அரசியாக்குவதற்குத்

தானே

 

அம்பை :

ஆமாம்

 

ஆனால்

அச்செயல்

நடைபெறவில்லை

 

சால்வன் :

ஏன்

நடைபெறவில்லை

 

அம்பை :

உண்மையைச்

சொல்ல

வேண்டியவர்களிடம்

சொன்னேன்

 

சால்வன் :

யாரிடம்

 

அம்பை :

பீஷ்மரிடம்

 

சால்வன் :

உண்மைக்கு இந்த

உலகத்தில்

மதிப்பிருக்கிறதா

 

அம்பை :

உண்மைக்கு இந்த

உலகத்தில்

மதிப்பிருக்கிறதா

இல்லையா

என்பது

எனக்குத் தெரியாது

 

ஆனால்

நான் சொன்னதை

உண்மை என்று

உணர்ந்ததால்

பீஷ்மர் 

ஏற்றுக் கொண்டார்

 

சால்வன் :

என்ன

சொன்னீர்கள்

 

அம்பை :

நான் சௌபால

நாட்டு மன்னன்

சால்வனைக்

காதலித்தேன்

 

சுயம்வர மண்டபத்தில்

சால்வனுக்கு

மாலையிட்டு

அவரையே திருமணம்

செய்து கொள்ள

நினைத்தேன்

 

அதற்குள்

நீங்கள் என்னை

சிறை எடுத்து

வந்து விட்டீர்கள்

என்று

பீஷ்மரிடம்

சொன்னேன்

 

சால்வன் :

பீஷ்மர்

என்ன சொன்னார்

 

அம்பை :

ஒருவரைக்

காதலித்து விட்டு

வேறு ஒருவரை

திருமணம்

செய்து கொள்ளக்கூடாது

 

நீங்கள் என்ன

செய்ய வேண்டும்

என்று

நினைக்கிறீர்களோ

அதைச் செய்யலாம்

என்றார்

 

சால்வன் :

ஒருவரைக்

காதலித்து விட்டு

வேறு ஒருவரை

திருமணம்

செய்யக்கூடாது

என்று சொல்லத்

தெரிந்த

பீஷ்மனுக்கு

ஒரு பெண்ணை

சிறை எடுப்பதற்கு

முன்னர் சிறை

எடுக்கப்போகும்

பெண் யாரையாவது

காதலிக்கிறாளா

என்பதைத் தெரிந்து

கொள்ள வேண்டும்

என்பது

தெரியாதா

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-03-2022

-----ஞாயிற்றுக்கிழமை

////////////////////////////////////////

No comments:

Post a Comment