March 06, 2022

ஜபம்-பதிவு-699 (சாவேயில்லாத சிகண்டி-33)

 ஜபம்-பதிவு-699

(சாவேயில்லாத

சிகண்டி-33)

 

ஆனால்

ஆணாக

இருக்கும் நீங்கள்

அம்பையை நான்

காதலிக்கிறேன்

என்று சொல்லி

இருக்கலாமே

நீங்கள் ஏன்

சொல்லவில்லை

 

சால்வன் :

ஒரு ஆண்

ஒரு பெண்ணை

காதலிக்கிறேன்

என்று சொன்னால்

அந்த பெண்ணிடம்

சென்று அந்த

ஆணை நீ

காதலிக்கிறாயா என்று

விசாரிப்பார்கள்

 

ஆனால் ஒரு பெண்

ஒரு ஆணை

காதலிக்கிறேன்

என்று சொன்னால்

அந்த ஆணிடம்

சென்று அந்த

பெண்ணை நீ

காதலிக்கிறாயா என்று

விசாரிக்க மாட்டார்கள்

 

ஒரு ஆண்

சொன்னால் நம்பாமல்

விசாரிக்கும் உலகம்

ஒரு பெண்

சொன்னால் நம்பும்

விசாரிக்காது

 

ஆணின்

காதலுக்கு இந்த

உலகத்தில்

மதிப்பு கிடையாது

பெண்ணின்

காதலுக்கே

இந்த உலகத்தில்

மதிப்பு இருக்கிறது

 

அதனால் தான்

நீங்கள் சொல்வீர்கள்

என்று நான்

அமைதியாக

இருந்தேன்

 

ஆனால் நீங்கள்

சொல்லவில்லை

 

அம்பை :

தவறு எங்கே

நடந்திருக்கிறது என்று

யோசிப்பதை விட

அடுத்து என்ன

செய்ய வேண்டும்

என்று யோசிக்கலாமே

 

சால்வன் :

யோசிப்பதற்கு

ஒன்றும் இல்லை

 

பீஷ்மன் அளித்த

பிச்சைப் பொருளான

உங்களை என்னால்

ஏற்றுக் கொள்ள

முடியாது

 

அம்பை :

என்னை ஏன்

பிச்சைப் பொருள்

என்கிறீர்கள்

 

சால்வன் :

காசி நாட்டில்

பீஷ்மனை வென்று

உங்களை நான்

அடைந்து இருந்தால்

வெற்றியின்

சின்னமாக

காதலின்

பரிசுப் பொருளாக

உங்களை

ஏற்று இருப்பேன்

 

ஆனால் என்னை

வென்ற பீஷ்மனால்

அனுப்பி

வைக்கப்பட்டவர்கள்

நீங்கள்

 

அப்படி என்றால்

நீங்கள் எனக்கு

பீஷ்மன் போட்ட

பிச்சை பொருள்

தானே

 

பிச்சைப் பொருளான

உங்களை எப்படி

என்னால் ஏற்றுக்

கொள்ள முடியும்

 

அம்பை :

காதலுக்காக என்னை

ஏற்றுக் கொள்ள

மாட்டீர்களா

 

சால்வன் :

நான் ஒரு

நாட்டின் அரசன்

பீஷ்மன் போட்ட

பிச்சையான உங்களை

திருமணம் செய்து

கொண்டால்

என்னுடைய நாட்டு

மக்கள் என்னை

இகழ மாட்டார்களா

 

இந்த உலகம்

என்னை கேவலமாகப்

பேசாதா

 

என்னுடைய

உறவினர்கள் என்னை

எப்படி மதிப்பார்கள்

 

பிச்சையான

அம்பையை

வைத்துக் கொண்டு

குடும்பம் நடத்துகிறேன்

என்று கேலி

செய்ய மாட்டார்களா

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-03-2022

-----ஞாயிற்றுக்கிழமை

////////////////////////////////////////

No comments:

Post a Comment