March 06, 2022

ஜபம்-பதிவு-711 (சாவேயில்லாத சிகண்டி-45)

 ஜபம்-பதிவு-711

(சாவேயில்லாத

சிகண்டி-45)

 

பிரம்மச்சாரியாக

இருந்தால்

அனைத்தையும்

துறந்தவனாக

இருக்க வேண்டும்

ஆனால் நீ

அனைத்தையும்

அனுபவித்துக்

கொண்டிருப்பவனாக

இருக்கிறாய்

அப்படி

இருக்கும் போது

உன்னை எப்படி

பிரம்மச்சாரியாக

ஏற்றுக்

கொள்ள முடியும்

 

நியாயம் கேட்டு

போராடிக்

கொண்டிருக்கும்

இளவரசியாக

இருந்த எனக்கே

நியாயம்

கிடைக்கவில்லை

என்றால்

இந்த உலகத்தில்

உள்ள ஒரு

சாதாரண பெண்ணுக்கு

அநீதி

இழைக்கப்பட்டால்

எப்படி நியாயம்

கிடைக்கும்

 

பணம்

பதவி

அதிகாரம்

ஆகியவற்றைக்

கொண்டிருப்பவர்கள்

எப்படி நியாயம்

வழங்குவார்கள்

 

இளவரசியாய்

இருந்த நான்

யாரும் இல்லாத

அனாதையாக

இப்படி நிற்பதற்கும்

நிர்க்கதியாக

நிற்பதற்கும்

வாழ்விழந்து

நிற்பதற்கும்

காரணமான பீஷ்மனை

நான் சும்மா

விடப்போவதில்லை

 

நான் சபதம்

ஏற்கிறேன்

இந்த அம்பை

சபதம் ஏற்கிறேன்

இந்த சபையில்

உள்ள அனைவர்

முன்னிலையிலும்

இந்த அம்பை

சபதம் ஏற்கிறேன்

 

அந்த வானத்தின்

மீது சத்தியம்

இந்த பூமியின்

மீது சத்தியம்

இறந்த காலம்

நிகழ் காலம்

எதிர்காலம் ஆகிய

முக்காலங்களின்

மீதும் சத்தியம்

 

பஞ்ச பூதங்களின்

மீது சத்தியம்

இந்த உலகத்தில்

உள்ள

ஓரறிவு முதல்

ஆறறிவு வரை

உள்ள அனைத்து

உயிரினங்களின்

மீதும் சத்தியம்

இந்த பிரபஞ்சத்தை

இயக்கிக்

கொண்டிருக்கும்

கடவுளின்

மீது சத்தியம்

முபபத்து முக்கோடி

தேவர்களின்

மீதும் சத்தியம்

மும்மூர்த்திகளின்

மீதும் சத்தியம்

இந்த உலகத்தில்

பிறந்தவர்கள்

இனி பிறக்கப்

போகிறவர்கள்

அனைவர்

மீதும் சத்தியம்

இந்த உலகத்தில்

இறந்தவைகள்

இனி இறக்கப்

போகிறவைகள்

அனைத்தின்

மீதும் சத்தியம்

 

மரணமற்றவன்

என்று தன்னை

சொல்லிக் கொள்ளும்

இந்த பீஷ்மனை

விரும்பும் போது

தான் மரணம்

என்று வரம்

பெற்று இருக்கும்

இந்த பீஷ்மனை

நான் கொல்லுவேன்

இந்த அம்பையின்

கையால் தான்

பீஷ்மனுக்கு சாவு

 

நான் விடும்

அம்பு தான்

பீஷ்மனுடைய

நெஞ்சை

இரண்டாகப் பிளக்கும்

 

பீஷ்மா

மரணம் என்பது

உனக்கு

உடனே

கிடைத்து விடாது

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-03-2022

-----ஞாயிற்றுக்கிழமை

////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment