March 06, 2022

ஜபம்-பதிவு-712 (சாவேயில்லாத சிகண்டி-46)

 ஜபம்-பதிவு-712

(சாவேயில்லாத

சிகண்டி-46)

 

உடலின் வலி

மனதின் வலி

ஆகிய

இரண்டையும்

ஒன்றாக

அனுபவித்து

கொஞ்சம்

கொஞ்சமாகத் தான்

நீ இறப்பாய்

 

உன் கண்

முன்னால்

அஸ்தினாபுரத்தின்

வாரிசுகள்

ஒருவொருக்கொருவர்

அடித்துக் கொண்டு

இறப்பதை

தடுக்க முடியாமல்

பார்த்து

விட்டுத் தான்

இறக்கப்

போகிறாய்

 

அஸ்தினாபுரத்தின்

அழிவை

அஸ்தினாபுரத்தின்

மக்களின்

அழிவை

அஸ்தினாபுரத்தின்

வாரிசுகளின்

அழிவை

உன்னுடைய

கண்களால்

பார்த்து

விட்டு தான்

இறக்கப்

போகிறாய்

 

நீ பெற்ற

வரமே

உனக்கு

சாபமாக

மாறப்போகிறது

பீஷ்மா

இன்று முதல்

உன்னுடைய

அழிவு

ஆரம்பமாகப்

போகிறது

 

இந்த அவையில்

உன்னுடைய

இறப்பு

குறிக்கப்பட்டு

விட்டது

 

அம்பையின்

அம்புகளால்

இறப்பதற்கு

தயாராக இரு

பீஷ்மா

 

தயாராக இரு

 

பீஷ்மா

உன்னுடைய

சாவு என் கையில்

என்னுடைய

கையில்

 

(என்று

ஆவேசமாகப்

பேசிவிட்டு

தலைவிரி

கோலத்துடன்

அந்த அவையை

விட்டு

வெளியேறினாள்

அம்பை)

 

(பதினெட்டு நாள்

நடந்த

குருஷேத்திரப் போரில்

பத்தாம்

நாளில்

யாரராலும்

அழிக்க

முடியாத

பீஷ்மரை

சிகண்டியாக

மாறிய அம்பை

தன்னுடைய

அம்புகளால்

பீஷ்மரின்

நெஞ்சை

பிளந்தாள்

 

அம்பை

சிகண்டியாக

எப்படி

மாறினாள்

என்பதைத்

தெரிந்து

கொள்ள

அம்பையைப்

பின்

தொடருவோம்)

 

------ஜபம் இன்னும் வரும்

 

------எழுத்தாளர்

------K.பாலகங்காதரன்

 

-----06-03-2022

-----ஞாயிற்றுக்கிழமை

////////////////////////////////////////

 

No comments:

Post a Comment