June 03, 2022

ஜபம்-பதிவு-770 (சாவேயில்லாத சிகண்டி-104)

 ஜபம்-பதிவு-770

(சாவேயில்லாத

சிகண்டி-104)

 

சிவன் :

இந்த உலகத்தில்

பிறக்கும்

மனிதர்கள் அனைவரும்

கர்மவினையைக்

கழித்து

பிறப்பை அறுத்து

முக்தியை

அடைய வேண்டும்

என்ற எண்ணத்தில்

தான் வாழ்ந்து

கொண்டு இருக்கிறார்கள்

 

தவம்

செய்பவர்களும்

முக்தியை

வேண்டித் தான்

தவம் செய்து

கொண்டிருக்கிறார்கள்

 

உலகத்திலேயே

மிக உயர்ந்த

விஷயமான முக்தியை

உனக்கு

அளிப்பதற்காக

நானே நேரில்

வந்தும் அதை

வேண்டாம் என்கிறாய்

 

அம்பை :

தன்னால்

கிடைக்கும் ஒன்றை

தவம் செய்து

தங்களை

வரவழைத்து

நான் ஏன்

பெற வேண்டும்

 

சிவன் :

முக்தி தன்னால்

பெறும் ஒன்றா

 

அம்பை :

ஆமாம் என்னைப்

பொறுத்தவரை

 

சிவன் :

உன்னால் எப்படி

முக்தியைப்

பெற முடியும்

 

அம்பை :

ஐயனே

என்னுடைய

வாழ்க்கையில் நான்

பட்ட கஷ்டங்களின்

காரணமாக

பெரும்பாலான

கர்மாக்களை

கழித்து விட்டேன்

 

எஞ்சியிருப்பது

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

என்ற எண்ணத்தினால்

உண்டான

கர்மா மட்டுமே

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

என்ற எண்ணத்தை

நான்

விட்டு விட்டால்

முக்தி எனக்கு

தன்னால்

கிடைக்கப் போகிறது

 

தன்னால் கிடைக்கும்

ஒன்றுக்காக நான்

ஏன் கஷ்டப்பட

வேண்டும்

 

அம்பை :

யாரிடம் பேசுகிறாய்

என்று தெரிந்து

தான் பேசுகிறாயா

 

அம்பை :

மும்மூர்த்திகளில்

ஒருவரிடம் பேசிக்

கொண்டிருக்கிறேன்

என்று

எனக்குத் தெரியும்

 

பிறப்பும் இறப்பும்

இல்லாத

பரம்பொருளிடம் பேசிக்

கொண்டிருக்கிறேன்

என்று

எனக்குத் தெரியும்

 

ஓம் என்ற

பிரணவ மந்திரத்தை

உருவாக்கியவரிடம்

பேசிக்

கொண்டிருக்கிறேன்

என்று

எனக்குத் தெரியும்

 

பிரளய காலத்தில்

அனைத்தையும்

அழித்துத் தன்னுள்

ஒடுக்கிச் சிவமாக

இருக்கும் சிவனிடம்

பேசிக்

கொண்டிருக்கிறேன்

என்று

எனக்குத் தெரியும்

 

அருவம் உருவம்

அருவுருவம் கொண்ட

சிவனிடம் பேசிக்

கொண்டிருக்கிறேன்

என்று

எனக்குத் தெரியும்

 

முப்புரம் எரித்த

முக்கண்

முதல்வனிடம் பேசிக்

கொண்டிருக்கிறேன்

என்று

எனக்குத் தெரியும்

 

ஆனால்

உங்களுக்குத் தான்

யாரிடம் பேசுகிறோம்

என்று தெரியாமல்

பேசிக்

கொண்டிருக்கிறீர்கள்

 

சிவன் :

தெரிந்து தான்

பேசிக்

கொண்டிருக்கிறேன்

 

அம்பை :

தெரிந்து பேசி

இருந்தால்

நீங்கள் முக்தியைப்

பற்றி பேசிக் கொண்டு

இருக்க மாட்டீர்கள்

 

பீஷ்மனைக்

கொல்வது எப்படி

என்பதைப் பற்றிப்

பேசிக் கொண்டு

இருந்திருப்பீர்கள்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------03-06-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment