June 03, 2022

ஜபம்-பதிவு-771 (சாவேயில்லாத சிகண்டி-105)

 ஜபம்-பதிவு-771

(சாவேயில்லாத

சிகண்டி-105)

 

சிவன் :

தவறு செய்ய

முயற்சிக்கும்

உன்னை

தவறு செய்ய

விடாமல் தடுக்க

நினைத்தேன்

 

அம்பை :

என்னிடம் என்ன

தவறைக்

கண்டீர்கள்

 

சிவன் :

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

என்று முயற்சி

செய்கிறாயே அது

தவறில்லையா

 

அம்பை :

என்னுடைய

வாழ்க்கையை

அழித்து பீஷ்மன்

தவறு செய்தான்

 

தவறுக்குரிய

தண்டனையை

பீஷ்மனுக்கு வழங்காமல்

நீங்கள் தவறு

செய்தீர்கள்

 

பீஷ்மன் செய்த

தவறுக்குரிய

தண்டனையை

வழங்குவதற்காக

நான் முயற்சி

செய்து

கொண்டிருக்கிறேன்

 

என்னை தவறு

செய்ய

முயற்சிக்கிறேன்

என்று சொல்கிறீர்கள்

 

சிவன் :

தவறு செய்தவன்

அதற்குரிய

தண்டனையை

அனுபவிப்பான்

 

அம்பை :

எப்போது

அனுபவிப்பான்

 

இறந்த பிறகா

அனுபவிப்பான்

 

தவறு

செய்தவனுக்குரிய

தண்டனையை

கடவுளாகிய நீங்கள்

உடனே

கொடுத்து இருந்தால்

அதைப்

பார்ப்பவர்கள்

தவறு செய்வதற்கு

பயப்படுவார்கள்

 

ஆனால் தவறு

செய்தவனுக்குரிய

தண்டனையை

உடனே நீங்கள்

கொடுப்பதில்லையே

தவறு செய்தவனை

வேடிக்கை

பார்த்துக் கொண்டு

தானே இருக்கிறீர்கள்

 

தவறு

செய்தவனுக்குரிய

தண்டனையை

கடவுளாகிய நீங்கள்

உடனே கொடுத்து

இருந்தால்

தவறு செய்ய

நினைப்பவனும்

தவறு செய்ய

பயப்படுவான்

 

ஆனால் தவறு

செய்தவனுக்குரிய

தண்டனையை

நீங்கள் உடனே

கொடுக்காத

காரணத்தினாலும்

தவறு செய்தவன்

பணம் பதவி

அதிகாரம் புகழ்

என்று வாழ்வதை

இந்த உலகத்தில்

உள்ள மற்ற

மக்கள் பார்க்கின்ற

காரணத்தினாலும்

தவறு

செய்தவனுக்குரிய

தண்டனையை கடவுள்

கொடுக்க மாட்டார்

என்று மனிதன்

புரிந்து

கொண்டிருக்கின்ற

காரணத்தினாலும் தான்

செய்வது தவறு

என்று தெரிந்தும்

மனிதன் துணிந்து

தவறை செய்கிறான்

 

அதனால் தான்

இந்த உலகம்

தவறு

செய்பவர்களால்

நிரம்பி இருக்கிறது

 

இந்த உலகம்

தவறு செய்பவர்களால்

நிரம்பி

இருப்பதற்கு காரணம்

கடவுளாகிய

நீங்கள் தான்

 

தவறு செய்த

பீஷ்மனுக்குரிய

தண்டனையை

நீங்கள் அளித்து

இருந்தால்

நான் ஏன்

தவம் செய்யப்

போகிறேன்

 

உங்களை ஏன்

அழைக்கப் போகிறேன்

 

உங்களிடம் வரம்

கேட்டு .ஏன்

நிற்கப் போகிறேன்

 

கடவுள் செய்ய

வேண்டிய கடமையை

கடவுள் செய்யவில்லை

தவறு

செய்தவனுக்குரிய

தண்டனையை

உடனே கடவுள்

கொடுக்கவில்லை

அதனால் நானே

பீஷ்மனுக்கு தண்டனை

கொடுக்க வேண்டும்

என்று நானே

கிளம்பி விட்டேன்

 

நீங்கள் செய்யத்

தவறிய கடமையை

நான் செய்கிறேன்

அது தவறா

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------03-06-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment