June 03, 2022

ஜபம்-பதிவு-778 (சாவேயில்லாத சிகண்டி-112)

 ஜபம்-பதிவு-778

(சாவேயில்லாத

சிகண்டி-112)

 

பீஷ்மனைக் கொல்ல

வேண்டும் என்ற

தன்னுடைய

கொள்கைக்காக

முக்தியையே

வேண்டாம்

என்று சொன்ன

அந்த தெய்வத் தாய் 

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

ஐம்புலன்கைளை

அறிந்து

பஞ்ச பூதங்களை

வசப்படுத்தி

ஒன்பது வாசல்களை

அடைத்து

பத்தாவது வாசலுக்குள்

பிரவேசித்து

இறைவனை தரிசித்த

அந்த தெய்வத் தாய்

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

யாரும் செய்யாததை

யாராலும் செய்ய

முடியாததை

செயல்படுத்திக் காட்டிய

அந்த தெய்வத் தாய்

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

கொள்கையை விலை

பேசுபவர்கள் மத்தியில்

தன்னுடைய

கொள்கைக்காக

அனைத்து

இழப்புகளையும்

தாங்கிக் கொண்ட

அந்த தெய்வத் தாய்

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

வாழ்க்கையில்

கஷ்டம் ஏற்பட்டால்

பயந்து விடக்கூடாது

அந்த கஷ்டத்தை

எதிர்த்து போராடினால்

வெற்றி பெறலாம்  

என்பதை

இந்த உலகத்திற்கு

நிரூபித்துக் காட்டிய

அந்த தெய்வத் தாய்

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

உலகமே எதிர்த்து

நின்றாலும்

பரவாயில்லை

உதவிகள் செய்யாமல்

அனைவரும்

கைவிட்டாலும்

பரவாயில்லை

நீக்க முடியாத

அவமானங்கள்

ஏளனங்கள்

அசிங்கங்கள்

வாழ்க்கையில்

ஏற்பட்டாலும்

பரவாயில்லை

அவைகளைக் கண்டு

துவண்டு விடாமல்

எதிர்த்து நின்று

போராடினால்

மட்டுமே வெற்றி

பெற முடியும்

என்பதை

இந்த உலகத்திற்கு

நிரூபித்துக் காட்டிய

அந்த தெய்வத் தாய்

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

வெளியில் இருந்து

பார்ப்பவர்கள் யாரும்

நம்முடைய கஷ்டத்தைப்

போக்குவதற்கு

உதவி செய்ய வர

மாட்டார்கள்

நம்முடைய

கஷ்டத்தை நாமே

தான் போக்க

வேண்டும் என்ற

தத்துவத்தை

இந்த உலகத்திற்கு

நிரூபித்துக் காட்டிய

அந்த தெய்வத் தாய்

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

நேர்மையாகவும்

உண்மையாகவும்

இருப்பவர்கள்

யாருக்கும் எதற்கும்

கடவுளுக்கும் கூட

பயப்பட வேண்டிய

அவசியம் இல்லை

என்பதை

இந்த உலகத்திற்கு

நிரூபித்துக் காட்டிய

அந்த தெய்வத் தாய்

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

ஆதரவுக் கரம்

நீட்ட இந்த

உலகத்தில் யாரும்

இல்லை என்றாலும்

நாம் தனித்து

நின்று போராடினாலும்

வெற்றி பெற்றுக்

காட்ட முடியும்

என்பதை

இந்த உலகத்திற்கு

நிரூபித்த

அந்த தெய்வத் தாய்

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

பெண்ணை

அடிமையாகவும்

போகப் பொருளாகவும்

நினைத்துக்

கொண்டிருக்கும்

இந்த சமுதாயத்தில்

பெண் நினைத்தால்

எந்த செயலையும்

செய்ய முடியும்

என்பதை இந்த

உலகத்திற்கு

நிரூபித்துக் காட்டிய

அந்த தெய்வத் தாய்

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

எத்தனை யுகம்

பிறந்தாலும்

இப்படிப்பட்ட

மன உறுதி

கொண்ட

ஒரு பெண்

அஞ்சா நெஞ்சம்

கொண்ட

ஒரு பெண்

எத்தகைய எதிர்ப்புகள்

வந்த போதும்

களங்காமல்

துணிச்சலுடன்

எதிர்த்து நின்று

போராடி வெற்றி

பெற்ற ஒரு பெண்

இந்த உலகத்தில்

இனி பிறக்க

முடியாது என்பதை

இந்த உலகத்திற்கு

நிரூபித்துக் காட்டிய

அந்த தெய்வத் தாய்

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------03-06-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

 

 

No comments:

Post a Comment