June 03, 2022

ஜபம்-பதிவு-777 (சாவேயில்லாத சிகண்டி-111)

 ஜபம்-பதிவு-777

(சாவேயில்லாத

சிகண்டி-111)

 

நெருப்பை நெருப்பு

எரிக்க மறுத்தது

ஆமாம் நெருப்பான

அம்பையை

நெருப்பு

எரிக்கவில்லை

 

இதனால் அம்பை

அக்னி பகவானைக்

கூப்பிட்டாள்

 

அம்பை

அக்னி பகவானே

என்றதும்

அக்னி பகவான்

நேரில் வந்தார்

 

அம்பை :

அக்னி பகவானே

என்னுடைய

கடமையைச்

செய்வதற்கு தடையாக

இருக்காதீர்கள்

நெருப்பில் நான்

எரிவதற்கு உதவி

செய்யுங்கள்

 

அக்னி பகவான் :

தெய்வத் தாயே

பத்தினி

தெய்வமாகிய

உங்களை எரித்து

நீக்க முடியாத

களங்கத்தை சுமக்க

நான் தயாராக

இல்லை

 

அம்பை :

என்னை எரிக்காமல்

விட்டால் தான்

உனக்கு களங்கம்

உண்டாகும்

என்னை எரிப்பதால்

உனக்கு எந்தவிதமான

களங்கமும் ஏற்படாது

 

அக்னி பகவானே

உன்னுடைய

கடமை என்ன

உன்னில் விழும்

எந்த ஒரு

பொருளையும்

எரிப்பது தானே

உன் கடமை

 

உன்னில் விழும்

எந்த ஒரு

பொருளையும்

பேதம் பிரித்து

பார்க்காமல்

அதை எரிக்க

வேண்டியது தான்

உன்னுடைய கடமை

 

உன்னுடைய

கடமையை

மறந்து விட்டாயா

 

என்னுடைய

கடமையை என்னைச்

செய்ய விடு

அடுத்த பிறவி

நான் எடுத்தாக

வேண்டும்

பீஷ்மனைக்

கொன்றாக வேண்டும்

 

என்னுடைய

கடமையை நான்

முடிப்பதற்கு

உன்னுடைய

கடமையை

நீ செய்

 

உன்

கடமையைச் செய்

அக்னி பகவானே

 

(என்று சொன்னவுடன்

அப்படியே தாயே

என்று மறைந்து

விட்டார்

அக்னி பகவான்

 

அம்பை நெருப்பில்

இறங்கினாள்

நெருப்பு அவளை

கொஞ்சம் கொஞ்சமாக

எரிக்க ஆரம்பித்தது

 

நெருப்பை நெருப்பு

எரித்து

கொண்டிருந்தது

ஆமாம்

நெருப்பான

அம்பையை நெருப்பு

எரித்துக்

கொண்டிருந்தது

 

அந்த

தெய்வத் தாயான

அம்பை

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

அம்பையின்

வாயிலிருந்து

சிறிதளவு அலறல்

சத்தம் கூட

எழவில்லை

 

அங்கே கூடி

இருந்தவர்கள்

அனைவரும்

தலைக்கு மேலே

கையைத் தூக்கி

வணங்கிய நிலையில்

கண்களில் கண்ணீர்

ஆறாக

பெருக்கெடுத்து ஓட

இக்காட்சியைக்

கண்டபடி

நின்று

கொண்டிருந்தனர்

 

எந்த பீஷ்மனால்

வாழ்க்கையை

இழந்தாளோ

அந்த பீஷ்மனைக்

கொல்வதற்கு

மறு பிறவி

எடுக்க வேண்டும்

என்பதற்காக

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

என்ற

எண்ணத்துடனே

அந்த தெய்வத் தாய்

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

உடலுக்குத் தான்

அழிவு ஆன்மாவுக்கு

அழிவில்லை

என்பதை உணர்ந்து

இருந்த காரணத்தினால்

அடுத்த பிறவி

எடுத்து கண்டிப்பாக

பீஷ்மனைக் கொல்வேன்

என்ற நம்பிக்கையுடன்

அந்த தெய்வத் தாய்

நெருப்பில் எரிந்து

கொண்டிருந்தாள்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------03-06-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment