June 03, 2022

ஜபம்-பதிவு-774 (சாவேயில்லாத சிகண்டி-108)

 ஜபம்-பதிவு-774

(சாவேயில்லாத

சிகண்டி-108)

 

தவம் செய்த

எத்தனையோ

பேர்களுக்கு

அவர்களுடைய

கோரிக்கையை

நிறைவேற்றுவதற்காக

வரம்

அளித்திருக்கிறேன்

அதில் எனக்கு

பெரியதாக ஒரு

திருப்தியும்

இருந்ததில்லை

 

ஆனால் உனக்கு

நான் வரதத்தை

அளிக்கும் போது

என்னுடைய

மனம் மகிழ்கிறது

வரம் பெறத்

தகுதி கொண்ட

ஒருவருக்கு வரத்தை

அளிக்கிறேன் என்று

என்னுடைய மனம்

மகிழ்கிறது

 

அம்பையே

இந்தப் பிறவியில்

உன்னால் பீஷ்மனைக்

கொல்ல முடியாது

அடுத்தப் பிறவியில்

தான் உன்னால்

பீஷ்மனைக்

கொல்ல முடியும்

 

அடுத்த பிறவியில்

பெண்ணாகப் பிறந்து

ஆணாக

மாறும் போது

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

என்ற நினைவு

உனக்கு வரும்

அப்போது

பீஷ்மனைக்

கொல்வாய்

 

உன்னுடைய

கையால் தான்

பீஷ்மனுக்கு சாவு

என்ற வரத்தை

உனக்கு அளிக்கிறேன்

 

அம்பை :

ஐயனே

பெண்ணாகப் பிறந்து

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

அல்லது

ஆணாகப் பிறந்து

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

இரண்டும் இல்லாமல்

பெண்ணாகப் பிறந்து

ஆணாக மாறி

பின் நான் ஏன்

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

 

சிவன் :

அம்பையே

இந்தப் பிறவியில்

உன்னுடைய

வாழ்க்கையில்

நடந்த பல

நிகழ்ச்சிகள்

ஏன் நடந்தது என்ற

கேள்விக்கே உனக்கு

விடை தெரியாமல்

இருக்கும் போது

அடுத்த பிறவியில்

உன்னுடைய

வாழ்க்கையில்

நடக்கப் போகும்

நிகழ்ச்சி

ஏன் நடக்கப்

போகிறது என்ற

கேள்விக்கு

விடை தேட

நீ ஏன் முயற்சி

செய்கிறாய்

 

அடுத்த பிறவியில்

பெண்ணாகப் பிறந்து

ஆணாக மாறி

பீஷ்மனைக்

கொல்வதற்கான

முயற்சிகளை நீ

மேற்கொள்ளும் போது

நீ கேட்ட

கேள்விக்கான

விடை உனக்கு

தெரியும்

 

அடுத்தப் பிறவியில்

தான் உன்னால்

பீஷ்மனைக்

கொல்ல முடியும்

என்ற வரத்தை

நான் உனக்கு

தந்ததால்

இந்தப் பிறவியில்

பீஷ்மனை உன்னால்

கொல்ல

முடியவில்லையே

என்ற வருத்தம்

உனக்கு இருக்கிறதா

அம்பையே

 

அம்பை :

ஐயனே

எனக்கு எந்த

வருத்தமும் இல்லை

அடுத்த பிறவியில்

என்னால் பீஷ்மனைக்

கொல்ல

முடியும் என்ற

வரத்தைத்

தந்தீர்களே அதுவே

எனக்கு மகிழ்ச்சி

 

இந்தப் பிறவியில்

வாழ்ந்தால் தானே

நான் வருத்தப்பட

வேண்டும்

 

பீஷ்மனைக்

கொல்ல முடியாத

இந்தப் பிறவியை

முடித்து விட்டு

அடுத்தப் பிறவிக்கு

சென்று பீ‌ஷ்மனைக்

கொல்லப் போகிறேன்

 

பீஷ்மனைக்

கொல்வதற்காக

அடுத்தப் பிறவிக்கு

செல்லப் போகும்

நான் ஏன்

வருத்தப்பட

வேண்டும்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------03-06-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

 

 

 

 

No comments:

Post a Comment