June 03, 2022

ஜபம்-பதிவு-776 (சாவேயில்லாத சிகண்டி-110)

 ஜபம்-பதிவு-776

(சாவேயில்லாத

சிகண்டி-110)

 

தாயே

நீங்கள் வந்த

பிறகு தான்

தண்ணீர் இல்லாமல்

பாலைவனமாக

வறண்டு கிடைந்த

எங்கள் நிலம்

பசுமையாக மாறியது

வயல்வெளிகள்

செழித்தது

கால்நடைகள்

பூரிப்பு அடைந்தது

எங்கள் இல்லங்கள்

சந்தோஷத்தால்

நிறைந்தது

 

பத்தினி

தெய்வமான

நீங்கள்

இறைவனின் அருள்

பெற்ற நீங்கள்

முக்தியையே

வேண்டாம் என்று

சொன்ன நீங்கள்

இறப்பைக் கண்டே

பயப்படாத நீங்கள்

பிரச்சினைகளைக்

கடந்து வெற்றி

வாகை

சூடிய நீங்கள்

உலகமே

எதிர்த்தாலும்

பயப்படாமல் தன்

கொள்கைக்காக

அந்த உலகத்தையே

எதிர்த்து போராடி

வெற்றி பெற்ற

நீங்கள்

கடவுளின்

அருள் பெற்ற

நீங்கள்

இந்த உலகத்தில்

வாழ வேண்டும்

எங்கள் மண்ணில்

வாழ வேண்டும்

எங்களுக்கு

வழிகாட்டியாக

இருக்க வேண்டும்

 

தாயே

நீங்கள்

இறக்கக் கூடாது

எங்களுக்காக நீங்கள்

வாழ வேண்டும்

 

(பேசாமல்

அமைதியாக இருந்த

அம்பை அவர்களைப்

பார்த்து பேசத்

தொடங்கினாள்)

 

அம்பை :

என்னுடைய

இறப்பைத்

தேர்ந்தெடுத்தது

நான் தான்

 

என்னுடைய

கடமையை முடிக்க

எனக்கு விடை

கொடுங்கள்

 

(என்று மட்டுமே

அம்பை பேசினாள்)

 

அனைவருடைய

கண்களில் இருந்தும்

கண்ணீர் வழிந்தது

 

கூட்டத்தில் ஒருவர் :

தாயே

உங்கள் முடிவை

அந்த இறைவனே

வந்தாலும்

மாற்ற முடியாது

என்பது

எங்களுக்குத் தெரியும்

விறகுகளை எடுத்து

நெருப்பை நாங்கள்

உருவாக்கித்

தருகிறோம்

நீங்கள் ஓய்வு

எடுங்கள்

 

அம்பை :

என்னுடைய

வாழ்க்கையில்

எந்த கஷ்டத்தை

எல்லாம்

அனுபவிக்கக்

கூடாதோ

அந்த கஷ்டத்தை

எல்லாம்

அனுபவித்து

முடித்து விட்டேன்

 

என்னுடைய

வாழ்க்கையில்

அனைத்து

செயல்களையும்

நானே செய்தேன்

என்னுடைய

இறப்பிற்கான

பணிகளையும் நானே

செய்ய வேண்டும்

 

விறகுகளை நானே

எடுக்க வேண்டும்

நெருப்பை நானே

உண்டாக்க வேண்டும்

அதில் விழுந்து

நானே இறக்க

வேண்டும்

 

யாரும் உதவி

செய்ய வேண்டாம்

உங்கள்

அன்புக்கு நன்றி

 

(என்று சொல்லி

விட்டு அம்பை

விறகுகளை எடுத்து

குழிக்குள் போட்டுக்

கொண்டிருந்தாள்

 

அம்பையின்

வார்த்தைக்கு

கட்டுப்பட்டு

அனைவரும்

விலகி நின்றனர்

 

தன்னுடைய

இறப்பிற்காக

விறகுகளை தானே

எடுத்து குழிக்குள்

போட்டு

அதில் நெருப்பை

உண்டாக்கினாள்

அம்பை

 

எரியும் நெருப்புக்கு

முன்னால் நின்று

கொண்டு வணங்கி

விட்டு நெருப்புக்குள்

அம்பை இறங்க

முயன்ற போது

நெருப்பு அம்பையை

எரிக்காமல்

எதிர்த்திசையில்

சென்றது

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------03-06-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment