June 03, 2022

ஜபம்-பதிவு-779 (சாவேயில்லாத சிகண்டி-113)

 ஜபம்-பதிவு-779

(சாவேயில்லாத

சிகண்டி-113)

 

தெய்வ

நிலையில்

இருப்பவர்களுடைய

இரத்தம் இறப்பின்

போது இந்த

பூமியில்

சிந்தக்கூடாது

மீறி இந்த பூமியில்

அவர்களுடைய

இரத்தம் சிந்தினால்

அதை இந்த

பூமி தாங்காது

என்பதை

உணர்ந்த அம்பை

இறப்பதற்காக

நெருப்பில் இறங்கி

இரத்தம் சிந்தாத

மரணத்தைத்

தேர்ந்தெடுத்த

அந்தத்

தெய்வத் தாய்

நெருப்பில்

எரிந்து

கொண்டிருந்தாள்

 

அந்த

தெய்வத் தாய்

முழுவதுமாக

நெருப்பில்

எரிந்து

இவ்வுலக

வாழ்க்கையிலிருந்து

விடுதலை பெற்று

பிரபஞ்சத்துடன்

பிரபஞ்சமாக

கலந்திருந்து

அடுத்த பிறவி

எடுப்பதற்காகக்

காத்துக் கொண்டு

இருந்தாள்

 

உடலால்

அழிந்தாலும்

உயிராக இந்த

உலகத்தில்

கலந்திருந்த அம்பை

உடல் எடுத்து

எங்கே

எப்போது

எந்த இடத்தில்

யாருக்குப்

பிறக்கப் போகிறார்

எந்தப் பெயரில்

இந்த உலகத்தில்

வாழப் போகிறார்

எப்படி

வாழப்போகிறார்

பெண்ணிலிருந்து

ஆணாக எப்படி

மாறப்போகிறார்

பெண்ணிலிருந்து

ஆணாக மாறி

பீஷ்மரைக்

கொல்வாரா

இந்தப் பிறவியில்

அடைந்த

கஷ்டங்களை

எடுக்கப் போகும்

அடுத்தப்

பிறவியிலும்

அடைவாரா

என்ற பல்வேறு

கேள்விக்கான

விடையை

தெரிந்து

கொள்வதற்கு

இந்த உலகமே

ஆவலுடன்

காத்துக்

கொண்டிருக்கிறது

 

நானும்

அந்த தெய்வத்

தாயான அம்பையை

வணங்கி

காத்துக் கொண்டு

இருக்கிறேன்

 

நீங்களும் காத்துக்

கொண்டு இருங்கள்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------03-06-2022

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////////

 

No comments:

Post a Comment