February 16, 2025

ஜபம்-பதிவு-1023 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-1

                                                    அர்ஜுனனைக் கொன்ற

                                       பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-1


(குரு ஆசிரமத்தில் அமர்ந்து யாகம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு துணையாக அவருடைய சீடர்களும் அவருடன் அமர்ந்து யாகம் செய்து கொண்டிருக்கின்றனர். அந்த சமயத்தில் கொள்ளையர்கள் ஆசிரமத்தில் இருந்த பசுக்களை ஓட்டிக் கொண்டு செல்கின்றனர். அதைப்பார்த்து சீடர்கள் அதைத் தடுக்க செல்கின்றனர். குரு தன் தலைமைச் சீடனை அழைக்கிறார்.)


குரு : எங்கே செல்கிறாய்?

சீடன் : கொள்ளையர்களை தடுக்கப் போகிறேன்!

குரு : உன்னால் முடியுமா?

சீடன் :  முடியாது? 

இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கிறேன்.


குரு : முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் 

முயற்சி செய்து பார்க்கலாம்.


முடியாது என்று முடிவெடுத்து விட்ட பிறகு

முயற்சி செய்வதால் என்ன பயன் ஏற்பட்டு விடப்போகிறது.


முடியாத ஒன்றை ஏன் முயற்சி செய்து பார்க்க வேண்டும்.


முடியாது என்று தெரிந்தும் முயற்சி செய்து பார்ப்பது

அறிவற்றவர்களின் வேலை அல்லவா?


அந்த வேலையையா நீ செய்யப் போகிறாய்?


சீடன் : அப்படி என்றால் தடுக்க வேண்டாமா ?


குரு :  உன்னால் முடியாது என்று சொல்லி விட்டாய்

பிறகு ஏன் தடுக்கப் போகிறேன் என்று சொல்கிறாய்.


நமக்கு சம்பந்தம் இல்லாத வேலையை செய்வதும் தவறு.

நம்மால் முடியாத வேலையை செய்வதும் தவறு.

முடியாது என்று தெரிந்தும் முயற்சி செய்து பார்ப்பதும் தவறு.


நமக்கு சம்பந்தம் இல்லாத வேலைகளில் 

நாம் தலையிடக் கூடாது.


நம்முடைய வேலை என்ன என்பதை 

முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.


இந்த உலகத்தில் பிறக்கும் அனைவரும் 

தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வேலையை 

முடிப்பதற்காகத் தான் இந்த உலகத்தில் பிறக்கிறார்கள்


தாங்கள் எதற்காக பிறந்திருக்கிறோம்

எந்த வேலையை முடிப்பதற்காக 

இந்த உலகத்திற்காக வந்திருக்கிறோம்

என்பதை உணர்ந்தவர்கள் 

தங்கள் கடமையை முடித்து விட்டு

தாங்கள் வந்த வேலையை முடித்து விட்டு

கர்மாவைக் கழித்து 

பிறவியை அறுத்து

இறைவனுடன் இரண்டறக் கலந்து 

முக்தி என்ற நிலையை அடைந்து விடுகின்றனர்

இந்த உலகத்தை விட்டு சென்று விடுகின்றனர்.

அவர்கள் இந்த உலகத்தில் மீண்டும் வந்து பிறப்பதேயில்லை

அவர்களுக்கு பிறவி என்பதே கிடையாது.


ஆனால்,

தாங்கள் எதற்காகப் பிறந்திருக்கிறோம்

எந்த வேலையைச் செய்வதற்காகப் பிறந்திருக்கிறோம் 

என்ன காரணத்திற்காக இந்த உலகத்திற்கு வந்திருக்கிறோம் 

எந்த வேலையை முடிப்பதற்காக 

இந்த உலகத்திற்கு வந்திருக்கிறோம்

எதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

என்பதை உணராதவர்கள்

அதைக் கண்டு பிடிக்க முடியாதவர்கள்

தாங்கள் செய்த கர்மவினைகளுக்கு ஏற்ப 

துன்பங்களுக்குள் மாட்டிக் கொண்டு

பல்வேறு கஷ்டங்களை அடைந்து

மீள முடியாத துயரத்தில் மூழ்கி.

மீண்டும் மீண்டும் இந்த மண்ணில் வந்து பிறக்கிறார்கள்

வாழ்கிறார்கள்,

இறந்து விடுகிறார்கள்


தாங்கள் எதற்காகப் பிறக்கிறோம் என்பதை உணர்ந்து

அந்த வேலையை முடித்தவர்களுக்கு 

கர்மவினைகளைக் கழித்தவர்களுக்கு

மீண்டும் பிறவி என்பதே கிடையாது

ஆனால்

தாங்கள் எதற்காகப் பிறந்திருக்கிறோம் 

என்பதை உணராமல் இருப்பவர்களுக்கு

தாங்கள் வந்த வேலையை முடிக்காமல் 

வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு

பிறவி என்பது உண்டு


சீடன் : மீண்டும் பிறக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்


குரு : முதலில் பயணம் என்றால் என்ன என்பதை

தெரிந்து கொள்ள வேண்டும்


நாம் மேற்கொள்ள வேண்டிய பயணம் என்ன என்பதைத் 

தெரிந்து கொள்ள வேண்டும்


பயணம் மேற்கொண்டால் என்ன நடக்கும் என்பதைத்

தெரிந்து கொள்ள வேண்டும்.


சீடன் : பயணம் என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள்?


குரு : பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட நம்முடைய

வாழ்க்கைப் பயணத்தைத் தான் குறிப்பிடுகிறேன்.


உன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை சரியாக நடத்திப் பார்

அனைவரையும் சமமாகப் பாவித்து

ஒருவருக்கொருவர் ஒத்தும் உதவியும் வாழ வேண்டும் 

என்ற சமத்துவ எண்ணம் தோன்றும்



-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----16-02-2025

/////////////////////////////////

No comments:

Post a Comment