February 16, 2025

ஜபம்-பதிவு-1031 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-9

                                                      அர்ஜுனனைக் கொன்ற

                                          பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-9


அனைத்துமாக பரிணமித்து இருப்பவன் இறைவன் என்ற காரணத்தினால்

அனைத்துமாக இருப்பவன் இறைவன் என்ற காரணத்தினால்

அனைத்தையும் ஆண்டு கொண்டிருப்பவன் இறைவன் என்ற காரணத்தினால்

அனைத்தையும் இயக்கிக் கொண்டிருப்பவன் இறைவன் என்ற காரணத்தினால்

அனைத்திற்குள்ளும் இருப்பவன் இறைவன் இருக்கின்றன காரணத்தினால்

செய்யும் செயலில் இறைவன் இருக்கின்ற காரணத்தினால்

அதனால் உண்டாகும் விளைவில் இறைவன் இருக்கின்ற காரணத்தினால்

விளைவுக்குரிய பாவ புண்ணியத்திற்குள் இறைவன் இருக்கின்ற காரணத்தினால்

இடம் நேரம் காலம் சூழ்நிலையைப் பொறுத்து 

ஒருவன் செய்யும் செயலுக்குரிய விளைவில் உண்டாகும்

பாவ புண்ணியத்திற்குரிய பலன்களை

உலகத்தில் எங்கோ ஒரு இடத்தில் இறைவன் அமர்ந்து கொண்டு

வழங்க வேண்டிய அவசியம் இல்லை

அனைத்திற்குள்ளும் இறைவன் இருக்கின்ற காரணத்தினால்

இடம், நேரம், காலம், சூழ்நிலையைப் பொறுத்து பலன்களை

இறைவன் அளித்துக் கொண்டு தான் இருக்கிறார்.


இந்த உண்மைகளை நான் உணர்ந்து இருக்கின்ற காரணத்தினால் 

நாம் எந்த ஒரு குற்றச் செயலைச் செய்தாலும்

அதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்து இருக்கின்ற காரணத்தினால்

நான் செய்த குற்றச் செயலுக்குரிய தண்டனையை 

காலம் எனக்கு வழங்குவதற்கு முன்பாகவே

தண்டனையை நானே அனுபவிக்கத் தீர்மானித்துட்டேன்


நான் செய்த குற்றச் செயலை மறைக்க விரும்பவில்லை

குற்றச் செயலைச் செய்து விட்டு 

அதற்குரிய தண்டனையிலிருந்து தப்பிக்க நான் விரும்பவில்லை


குற்றச் செயலுக்குரிய தண்டனையை அனுபவிக்க முடிவு செய்து விட்டேன்

தண்டனையை அனுபவிக்க நான் வனவாசம் செல்லத் தீர்மானித்து விட்டேன்

அதனால் வனவாசம் செல்ல கிளம்பி விட்டேன்


தர்மர் : நீ வனவாசம் செல்வதை மாற்ற முடியாதா?


அர்ஜுனன் : நடக்கப் போகும் எந்த ஒரு செயலையும் தடுக்க முயற்சி செய்யக் கூடாது நடக்கப் போகும் செயல் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தினாலும் அந்த செயலை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்

அந்த செயலுக்குரிய பாதிப்பை அனுபவித்து விட்டு தான் கடந்து போக வேண்டும்

அப்போது தான் அந்த செயல் கழிந்து போகும்

இல்லை என்றால் அந்த செயலும் கழிந்து போகாது

அது ஏற்படத்த வேண்டிய பாதிப்பும் கழிந்து போகாது


நடக்க வேண்டிய எந்த ஒரு செயலையும் தடுக்கவும் முடியாது

அதனுடைய பாதிப்பிலிருந்து தப்பிக்கவும் முடியாது


நடக்கப் போகும் செயல் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதற்காக

நடக்கப் போகும் செயலை தடுக்க முயற்சி செய்தால்

அந்த செயல் வேறொரு செயலாக வெளிப்பட்டு

அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்

ஆகவே எந்த ஒரு செயலையும் தடுக்க முயற்சி செய்யக்கூடாது

நடக்கும் செயலை அனுபவித்து விட்டுத் தான் கடந்து போக வேண்டும்


தர்மர் : நீ இல்லாமல் நான் இருப்பேனா என்பதை நீ நினைத்துப் பார்த்தாயா. 

உன் பிரிவால் எனக்கு ஏற்படும் கஷ்டத்தை நீ நினைத்துப் பார்த்தாயா

நீ இல்லாமல் நான் எவ்வளவு துன்பங்களை அனுபவிப்பேன் என்பதை 

நீ நினைத்துப் பார்த்தாயா 


இதை எல்லாம் நீ நினைத்துப் பார்த்து இருந்தால் 

வனவாசம் செல்லப் போகிறேன் என்று நீ சொல்லி இருக்க மாட்டாய்

என்னை தவிக்க விட்டு செல்லப் போகிறேன் என்று

சொல்லி இருக்க மாட்டாய்


அர்ஜுனன் : அண்ணா

நான் இருந்தால் தான் இன்பம் இருக்கும் என்பதும் கிடையாது

நான் இல்லா விட்டால் துன்பம் என்பது உருவாகும் என்பதும் கிடையாது


நான் இருந்தால் தான் குடும்பத்தால் வாழ முடியும் என்பதும் கிடையாது

நான் இல்லா விட்டால் குடும்பத்தால் வாழ முடியாது என்பதும் கிடையாது


நான் இருந்தாலும் இல்லா விட்டாலும் 

இன்பமும், துன்பமும் இருக்கத் தான் போகிறது


நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும்

இந்த உலகம் இருக்கத் தான் போகிறது

இயங்கத் தான் போகிறது


நான் இருந்தாலும் இல்லா விட்டாலும்

சூரியன் உதிக்கத் தான் போகிறது மறையத் தான் போகிறது


நான் இருந்தாலும் இல்லா விட்டாலும்

இந்த பிரபஞ்சத்தில் நடக்க வேண்டியது 

நடந்து கொண்டு தான் இருக்கப் போகிறது


அப்படி இருக்கும் போது நான் வனவாசம் செல்வதால் 

ஒரு இழப்பும் ஏற்பட்டு விடப்போவதில்லை


நான் செல்கிறேன் என்னை வழியனுப்பி வையுங்கள்


தர்மர் : அர்ஜுனா இனி உன்னை யாராலும் தடுக்க முடியாது


கண்டிப்பாக நீ வனவாசம் சென்றே ஆக வேண்டும் என்பதை 

காலம் முடிவு செய்து விட்டது


ஏதோ ஒரு விஷயத்திற்காக 

காலம் உன்னை வனவாசம் அனுப்புகிறது


ஒரு உயர்ந்த விஷயத்தை உருவாக்குவதற்காக

காலம் உன்னை வனவாசம் அனுப்புகிறது


நல்லதை நடக்க வைக்க

காலம் உன்னை வனவாசம் அனுப்புகிறது


தர்மத்தை நிலைநாட்ட

காலம் உன்னை வனவாசம் அனுப்புகிறது


சென்று வா

காலம் என்ன சொல்கிறதோ அதை செய்

காலம் ‘உன்னை வழி நடத்தும்

காலம் உன்னை காப்பாற்றும்

சென்று வா


(அண்ணனிடம் விடைபெற்றுக் கொண்டு அர்ஜுனன் வனவாசம் புறப்பட்டான்)


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----16-02-2025

/////////////////////////////////

No comments:

Post a Comment