February 16, 2025

ஜபம்-பதிவு-1027 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-5

                                                           அர்ஜுனனைக் கொன்ற

                                                   பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-5



ஆனால்., 

நாம் கோபப்படும் போது நாம் பேசும் வார்த்தைகள்

உண்மையான வார்த்தைகளாக மட்டுமே இருக்கும்


பொய்யான வாழ்க்கை வாழும் போது 

நாம் பேசிய பொய்யான வார்த்தைகளுக்கு நேர் எதிராக 

இந்த வார்த்தைகள் இருக்கும்


கோபப்படும் போது அந்த நேரத்தில் 

உண்மையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு

பிறரைப் பற்றி நாம் உண்மையாக என்ன நினைக்கிறோமோ

அந்த உண்மையான வார்த்தைகளை மட்டுமே பேசுவோம்


பிறரை பெரிய அறிவாளி இல்லை என்று பேசுவோம்

திறமைசாலி இல்லை என்று பேசுவோம்

சிறந்த உழைப்பாளி இல்லை என்று பேசுவோம்

கருணை உள்ளம் இல்லை என்று பேசுவோம்

பிறருக்கு உதவி செய்பவர் இல்லை என்று பேசுவோம்

முட்டாள் என்று பேசுவோம்

ஒன்றுக்கும் லாயக்கில்லை என்று பேசுவோம்

பிச்சைக்காரன் என்று பேசுவோம்

இரக்கமே இல்லாதவர் என்று பேசுவோம்


அப்போது இந்த சமுதாயம் கோபப்படாதே என்று சொல்லும்

கோபத்தில் பேசாதே என்று சொல்லும்

கோபம் விட்ட பிறகு பேசு என்று சொல்லும்


கோபத்தில் வார்த்தையை விடாதே 

கோபம் தணிந்த பிறகு பேசு என்று உலகம் சொல்லும்


கோபத்தில் பேசி விட்டால் அதை அள்ள முடியாது 

என்று உலகம் சொல்லும்


கோபத்தில் பேசும் வார்த்தைகள் 

பிறர் மனதை காயப்படுத்தும் என்று சொல்லும்


கோபத்தில் பேசும் வார்த்தைகள் உண்மையில்லை என்று நிரூபிக்க 

இந்த உலகம் முயற்சி செய்யும்

அதனால் கோபத்தில் பேசாதே என்று உலகம் சொல்கிறது


கோபத்தில் நாம் பிறரைப் பற்றி பேசும் வார்த்தைகள் தான் 

உண்மையான வார்த்தைகள் அந்த நேரத்தில் தான் 

நாம் உண்மையான வாழ்க்கையை வாழ்கிறோம் 

என்ற உண்மையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்


கோபத்தில் மட்டுமல்ல குடிகாரர்களும்

குடித்து விட்டால் உண்மையைப் பேசி 

உண்மையான வாழ்க்கையைத் தான் வாழ்வார்கள் 


குடிகாரர்கள் குடிக்காமல் இருந்தால் பிறரைப் பற்றி

பொய்யாகப் பேசி பொய்யான வாழ்க்கை வாழ்வார்கள்

ஆனால், அதுவே குடித்து விட்டால் அந்த நேரத்தில்

அவர்கள் உண்மையைப் பேசி 

உண்மையான வாழ்க்கையைத் தான் வாழ்வார்கள்


அப்போது அவர்கள் பேசும் பேச்சுக்கள் சம்பந்தப்பட்டவரை காயப்படுத்தத் தான் செய்யும்

சம்பந்தப்பட்டவரின் உண்மை வாழ்க்கையை வெளிப்படுத்தத் தான் செய்யும்

சம்பந்தப்பட்டவரின் உண்மை குணநலன்களை வெளிப்படுத்தத் தான் செய்யும்


கோபப்படும் போதும் 

குடித்து விட்டு பேசும் போது தான்

மனிதர்கள் பொய்யாகப் பேசி 

பொய்யான வாழ்க்கையை வாழ மாட்டார்கள்

என்ற காரணத்தினால் தான்


அப்போது தான் அவர்கள் 

உண்மையைப் பேசி உண்மையான வாழ்க்கை வாழ்வார்கள் 

என்ற காரணத்தினால் தான்


அப்போது தான் அவர்கள்

பிறருடைய உண்மையான குணநலன்களை

வெளிப்படுத்திக் காட்டி விடுவார்கள் 

என்ற காரணத்தினால் தான்


அப்போது தான் அவர்கள்

பிறர் செய்யும் அட்டூழியங்களையும், அராஜகங்களையும் 

வெளிச்சம் போட்டுக் காட்டி விடுவார்கள்

என்ற காரணத்தினால் தான்,


அப்போது தான் அவர்கள்

நல்லவர்கள் போல் நடித்துக் கொண்டு இருப்பவர்கள்

உண்மையாகவே நல்லவர்கள் இல்லை என்பதை

இந்த உலகத்திற்குப் புரிய வைத்து விடுவார்கள் 

என்ற காரணத்தினால் தான்


அப்போது தான் அவர்கள்

பொய்யான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும்

பலபேருடைய வாழ்க்கையை வெளிக்கொண்டு வந்து விடுவார்கள்

என்ற காரணத்தினால் தான்


அப்போது தான் அவர்கள்

யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருக்கும் 

தங்களுடைய தவறுகளை வெளிப்படுத்தி மானத்தை வாங்கி விடுவார்கள்

என்ற காரணத்தினால் தான்,


அப்போது தான் அவர்கள்

யாரைப் பற்றிப் பேசுகிறார்களோ அவர்களைப் பற்றிய உண்மைகள் 

இந்த வெளி உலகத்திற்குத் தெரிந்து விடக்கூடாது 

என்ற காரணத்தினால் தான்


தங்களைப் பற்றி மறைத்து வைத்திருக்கும் உண்மைகள் 

இந்த உலகம் தெரிந்து கொள்ளக்கூடாது என்ற காரணத்தினால் தான்

இந்த உலகத்தில் வெளிப்படக் கூடாது என்ற காரணத்தினால் தான்

குடிகாரர்கள் குடித்து விட்டால் பேசாதே என்று சொல்கிறார்கள்

குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்கிறார்கள்


கோபப்பட்டு பேசும் போதும் குடித்து விட்டுப் பேசும் போதும் 

அவர்களை பேச விடாமல் தடுப்பதற்கும்,

பேசக் கூடாது என்று சொல்வதற்கும் 

,இது தான் முக்கிய காரணம்


அர்ஜுனன் : குருதேவர் கடைசியாக என்ன சொன்னார்?


சீடன் : கடைசியாக ஒரு வார்த்தை சொல்லச் சொன்னார்


அர்ஜுனன் : என்ன சொல்லச் சொன்னார்?


சீடன் : தர்மருக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை என்றால் நாட்டை துரியோதனனிடம் ஒப்படைத்து விட்டு காட்டிற்குப் போகச் சொன்னார்.


அர்ஜுனன் : என்ன துரியோதனனிடமா?


சீடன் : ஆமாம்! துரியோதனனிடமே தான்


அர்ஜுனன் : நாட்டின் மேல் ஆசைப்படுபவனிடமே நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்றா சொல்கிறீர்கள்?


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----16-02-2025

/////////////////////////////////

No comments:

Post a Comment