February 16, 2025

ஜபம்-பதிவு-1026 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-4

                                                          அர்ஜுனனைக் கொன்ற

                                               பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-4

                

பாண்டவர்கள் அனைவரும் பேச்சில் தான் வல்லவர்கள்

அவர்களுக்கு நாட்டையும் ஆளத் தெரியாது

மக்களையும் பாதுகாக்கத் தெரியாது

என்று சொல்லச் சொன்னார்


அர்ஜுனன் : கோபத்தில் பேசிய வார்த்தைகள்


சீடன் : உண்மை இருக்காது என்று சொல்கிறீர்களா?


அர்ஜுனன் : கோபத்தில் பேசும் வார்த்தைகள் தன்னை மறந்த நிலையில் பேசுபவை 

அதில் உண்மை இருக்காது.


சீடன் : தன்னை மறந்த நிலையில் பேசும் வார்த்தைகளில் தான் உண்மை இருக்கும்.

அதனால் தான் கோபத்தில் பேசும் வார்த்தைகளில் உண்மை இருக்கிறது.


இந்த உலகத்தில் வாழும் மக்கள் அனைவரும்

உண்மையான வாழ்க்கை 

பொய்யான வாழ்க்கை 

என்ற இரண்டு வேறுபட்ட வாழ்க்கை முறைகளைக் கொண்டு 

வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.


நாம் பிறரைப் பற்றி உண்மையாகவே என்ன நினைக்கிறோம் என்று 

உண்மையை வெளியே சொல்லி வாழ்ந்தால் - அதற்கு

உண்மையான வாழ்க்கை என்று பெயர்


நாம் பிறரைப் பற்றி உண்மையாகவே என்ன நினைக்கிறோம் என்பதை

வெளியே சொல்லாமல் பொய்யைச் சொல்லி வாழ்ந்தால் - அதற்கு 

பொய்யான வாழ்க்கை என்று பெயர்


இந்த உலகத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் 

உண்மையான வாழ்க்கையை வாழ்வதே இல்லை

பொய்யான வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

இந்த உலகத்தில் உண்மையான வாழ்க்கையை வாழ முடியாது 

பொய்யான வாழ்க்கையைத் தான் வாழ முடியும்


பொய்யான வாழ்க்கையை வாழ்ந்தால் மட்டுமே 

நம்மால் இந்த உலகத்தில் நிம்மதியாக வாழ முடியும்


உண்மையான வாழ்க்கையை வாழ்ந்தால் 

நம்மால் இந்த உலகத்தில் நிம்மதியாக வாழவே முடியாது


நாம் பிறரைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்ற 

உண்மையைச் சொல்லாமல் 

பொய் சொல்லி பொய்யான வாழ்க்கை வாழ்ந்தால் மட்டுமே

நம்மால் பிறருடன் நட்பாகவும் வாழ முடியும்.

இந்த உலகத்தில் நிம்மதியாகவும் வாழ முடியும்


நாம் பிறரைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்ற

உண்மையைச் சொல்லி 

உண்மையான வாழ்க்கையை வாழ்ந்தால்

நம்மால் பிறருடன் நட்பாகவும் வாழ முடியாது

இந்த உலகத்தில் நிம்மதியாகவும் வாழ முடியாது


நாம் உண்மையைச் சொல்லிக் கொண்டு 

உண்மையான வாழ்க்கை வாழ்ந்தால்

நாம் பிறருடன் சண்டை போடக் கூடிய நிலை தான் ஏற்படும்

உறவுகள் முறிந்து விடக்கூடிய நிலை தான் ஏற்படும்

பிரிவுகள் உண்டாகக் கூடிய நிலை தான் ஏற்படும்.


எனவே, நாம் பிறரைப் பற்றி உண்மையாக என்ன நினைக்கிறோம் என்ற 

உண்மையைச் சொல்லி 

உண்மையான வாழ்க்கையை வாழாமல்

பொய்யைச் சொல்லி 

பொய்யான வாழ்க்கை வாழ்ந்தால் மட்டுமே 

நம்மால் பிறருடன் நட்பாகவும் வாழ முடியும்

இந்த உலகத்தில் நிம்மதியாகவும் வாழமுடியும்


நாம் கோபப்பட்டு பேசும் போது தான் 

பிறரைப் பற்றி என்ன நினைத்திருந்தோமோ அந்த உண்மைகளைப் பேசி 

அந்த நேரத்தில் தான் நாம் உண்மையான வாழ்க்கையையே வாழ்வோம்


நாம் கோப்பட்டு பேசும் போது அந்த பேச்சை உன்னிப்பாக கவனித்தால்

நாம் பிறறைப் பற்றி என்ன உண்மையாக நினைத்திருந்தோமோ

அந்த உண்மைகளை வெளிப்படையாகப் பேசுவோம்

அந்த நேரத்தில் தான் நாம் உண்மையான வாழ்க்கையை 

உண்மையாக வாழ்ந்து கொண்டிருப்போம்


இதுவரை பிறரைப் பற்றி பொய்யைப் பேசி 

பொய்யான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்த நாம்

கோபம் வந்து பேசும் போது தான் உண்மையைப் பேசி 

உண்மையான வாழ்க்கையை வாழ்வோம் 


நாம் பிறரைப் பற்றி பொய்யைப் பேசி 

பொய்யான வாழ்க்கை வாழும் போது

நாம் பிறரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவோம்

பெரிய அறிவாளி என்று பேசுவோம்

திறமைசாலி என்று பேசுவோம்

சிறந்த உழைப்பாளி என்று பேசுவோம்

கருணை உள்ளம் கொண்டவர் என்று பேசுவோம்

பிறருக்கு உதவி செய்பவர் என்று பேசுவோம்


நாம் பொய்யான வாழ்க்கை வாழும் போது

பிறரைப் பற்றி நாம் பேசும் வார்த்தைகள் அனைத்தும்

பொய்யான வார்த்தைகள்.


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----16-02-2025

///////////////////////////////// 

No comments:

Post a Comment