June 24, 2020

அறிய வேண்டியவை-பதிவு-38


            ஜபம்-பதிவு-530
      (அறிய வேண்டியவை-38)

“நீ இந்த
தவறைச் செய்யாதே
செய்யவும் சிந்தையில்
நினைக்காதே
வீரனுக்கு அழகு
நேர் நின்று
தாக்குவது
மறைந்து நின்று
தாக்குவது கிடையாது
மறைந்து நின்று
தாக்குவது
கோழைகளின் செயல்
நீ கோழையாக
மாறாதே
அஸ்வத்தாமா
வீரனாக இருந்தாய்
வீரனாகவே
இருக்க முயற்சி செய் “

“தவறான வழியில்
செல்லாதே- நான்
சொன்னவைகளை
யோசித்துப் பார்
அஸ்வத்தாமா நான்
சொல்வது
உனக்கு விளங்கும் “

“துரியோதனன்
பெரியோர்களுடைய  ;
பேச்சைக்
கேட்கவில்லை ;
யாரையும்
மதிக்கவில்லை ;
ஆணவம்
அவனுடைய
கண்ணை மறைத்தது ;
அகம்பாவம்
அவனுடைய
சிந்தனையை
அழித்தது ;
அவன்
பெரியவர்களுடைய
பேச்சை
மதித்து கேட்டு
நடந்து இருந்தால்
துரியோதனனுக்கு
இந்த நிலை
ஏற்பட்டிருக்காது ;  
அனாதையாக
மண்ணில்
புழுதியில் கிடக்க
வேண்டிய நிலை
ஏற்பட்டிருக்காது ;”

“அதனால் நான்
சொல்வதைக் கேள்
அஸ்வத்தாமா - நாம்
சென்று
திருதராஷ்டிரன்
காந்தாரி விதுரர்
ஆகியோரிடம் போய்
ஆலோசனை
கேட்போம் ;
அவர்கள் என்ன
வழிமுறைகளை
சொல்கிறார்கள்
என்று பார்ப்போம் ;’

அஸ்வத்தாமன் :
“நான் எந்த ஒரு
விஷயத்திற்காகவும்
என்னை
சமாதானப்படுத்திக்
கொள்ள மாட்டேன் ;
நீங்கள் சொல்லும்
வார்த்தைகள்
என் மனதை
சாந்தப்படுத்தவில்லை ;
நாம் அனைவரும்
துரியோதனுக்காக
போரிட்டோம் ;
துரியோதனனுடைய
வெற்றிக்காக
உழைத்தோம் ;
எது சரி
எது தவறு
என்று கூட
யோசிக்காமல்
துரியோதனன் செய்த
செயல்கள்
அனைத்திற்கும்
பின்னால் நின்று
உழைத்தோம் ;
துரியோதனனின்
பின்னால்
நின்று எப்படி
துரியோதனனுடைய
வெற்றிக்காக
பாடுபாட்டுமோ
அவ்வாறே இப்போதும்
துரியோதனனுக்காக
உழைக்க வேண்டும்
என்று நான் முடிவு
எடுத்திருக்கிறேன் ;
பாண்டவர்களை
இரவில் உறங்கிக்
கொண்டிருக்கும்
போது அவர்களைக்
கொல்ல வேண்டும்
என்ற என்னுடைய
எண்ணத்தை யாராலும்
மாற்ற முடியாது ;
என் புண்பட்ட
மனதிற்கு
பாண்டவர்களின்
மரணம் தான் மருந்து ;
அது எந்த விதத்தில்
நிகழ்கிறது என்பது
முக்கியமில்லை
நடக்க வேண்டியது
தான் முக்கியம் “

“பாண்டவர்கள்
அனைவரையும்- நான்
அழித்த பிறகே
என் மனம் சாந்தம்
அடையும்  
என்னுடைய
தந்தையின்
மரணத்திற்கும்
துரியோதனனின் இந்த
நிலைக்கும் நான்
பழி தீர்த்தவனாவேன்”

கிருபர் :
“அஸ்வத்தாமா நீ
இப்போது உணர்ச்சி
வசப்பட்ட நிலையில்
இருக்கிறாய் ;
அதனால் ஏற்பட்ட
கோபம் உன்னுடைய
அறிவை மறைக்கிறது ;
நல்லது எது
கெட்டது எது
என்பதை சிந்திக்க
முடியாமல் நீ
தடுமாறுகிறாய் ;
நீ ஒரு முடிவை
எடுத்து விட்டாய் -அதை
முடிக்க வேண்டும்
என்று செயலில்
இறங்குவதற்கு
தயாராகி விட்டாய் ;
இப்போது இரவாக
இருக்கிறது ;
இப்போது அமைதியாக
உறங்கு - உனது
மனம் சாந்தப்படும்
தூங்கி காலையில்
எழுந்தால் மனம்
புத்துணர்ச்சியுடன்
இருக்கும்
நீ என்ன செயல்படுத்த
நினைக்கிறாயோ அதை
நாளை காலையில்
செயல்படுத்துவோம் ;
நாங்கள் இருவரும்
உனக்கு துணையாக
வருகிறோம் “

“இப்போது
உறக்கம் கொள்
காலையில் ஆக
வேண்டியதைப்
பற்றிப் பார்ப்போம் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment