June 24, 2020

அறிய வேண்டியவை-பதிவு-35


             ஜபம்-பதிவு-527
        (அறிய வேண்டியவை-35)

(துரியோதனன் படுகாயமுற்று
இரத்த வெள்ளத்தில்
தரையில் படுத்துக்
கொண்டிருக்கிறான் ;
தொடைகள் முறிக்கப்பட்டு
புழுதியினால் மூடப்பட்ட
நிலையில் தரையில்
படுத்துக் கொண்டிருந்த
துரியோதனனுடைய
அருகில் சென்ற
சஞ்சயனிடம்
துரியோதனன்
பேசத் தொடங்கினான்;)

துரியோதனன் :
“சஞ்சயனே பதினோரு
அக்ரோணி சேனைக்குத்
தலைவனாக இருந்த
துரியோதனனான
என்னை நேருக்கு நேர்
நின்று போர் புரிந்து
வெற்றி பெற முடியாது
என்பதைத் தெரிந்து
கொண்ட கோழைகளான
பாண்டவர்கள்  ;
கபடவேடதாரியான
கிருஷ்ணனின்
கால் பிடித்து
வாழும் பாண்டவர்கள் ;
தர்மத்தின் வழி
செல்கிறேன் ;
தர்மத்தை நிலை
நாட்டப் போகிறேன் ;
என்று சொல்லிக்
கொண்டு நல்லவர்கள்
போல் நடித்துக் கொண்டு
அதர்மங்களை செய்து
கொண்டிருக்கும்
பாண்டவர்கள் ;
பீமனை வைத்து
நயவஞ்சக வேலை
செய்து போர்
விதிமுறைகளை மீறி
என்னைத் தாக்கியதால்
நான் அடிபட்டு
வீழ்ந்தேன் இதற்கு
காரணம் சூழ்ச்சிகளைச்
செய்யும்
கிருஷ்ணன் தான்;”.

“கபட வேடதாரி
கிருஷ்ணனின்
தூண்டுதலின்
பேரில் பீமன் போரின்
விதிமுறைகளை மீறி
என்னை தாக்கி
படுகாயமுறச்
செய்து இருக்கிறான் ;
இச்செயலால்
காயமுற்ற நான்
தரையில் இரத்த
வெள்ளத்தில்
புழுதிக்கு நடுவே
நகர முடியாமல்
இறப்பை எதிர்
நோக்கிக் காத்துக்
கொண்டிருக்கிறேன் ;
என்னால் நகர
முடியாமல்
கஷ்டப் பட்டுக்
கொண்டிருக்கிறேன் ;
இரத்த வெள்ளத்தில்
துடித்துக்
கொண்டிருக்கிறேன் ;
நயவஞ்சகம் என்னை
இந்த மண்ணில்
கிடத்தி இருக்கிறது ;
சூழ்ச்சி என்னை
நகர முடியால்
செய்து இருக்கிறது ;
சதித்திட்டம் என்னை
தோல்விக்கு கொண்டு
சென்று இருக்கிறது ;’

“எனக்கு ஏற்பட்டுள்ள
இந்த நிலைமையை
என்னுடைய தாய்
தந்தையரிடம் சென்று
சொல் நான் என்னுடைய
வாழ்க்கையில்
அனைத்துவிதமான
சுகங்களையும்
அனுபவித்து விட்டேன் ;
அரச தர்மப்படி
போர் செய்து அதனால்
ஏற்பட்ட காயத்தால்
நான் உயிர் துறக்க
இருக்கிறேன் ;
நான் புறமுதுகு காட்டி
ஓடவில்லை ;
போர்க்களத்தில் உயிர்
துறக்க இருக்கிறேன் ;
நயவஞ்சகம் என்னை
சாய்த்து விட்டது ;
இந்த உலகத்தை விட்டு
செல்லக்கூடிய
நேரம் நெருங்கிக்
கொண்டிருக்கிறது ;
எனக்கு ஏற்பட்டிருக்கும்
இந்த முடிவை
அஸ்வத்தாமன்
கிருபர் கிருதவர்மன்
ஆகியோரிடம்
சென்று சொல் ;”

(என்றான் துரியோதனன்
இச்செய்தியைக்
கேள்விபட்ட
அஸ்வத்தாமன் கிருபர்
கிருதவர்மன் ஆகியோர்
துரியோதனன் இருக்கும்
இடம் வந்தனர்

துரியோதனன் இருக்கும்
நிலையைப் பார்த்து
அஸ்வத்தாமன் கிருபர்
கிருதவர்மன் ஆகியோர்
கண் கலங்கி
நிற்கின்றனர்)

அஸ்வத்தாமன் :
“இளவரசே வீரத்திற்கு
இலக்கணமாக இருந்தீர்கள் ;
யாராலும் உங்களை
வீழ்த்த முடியாது
என்று சொல்லத்தக்க
வகையில்
வீரனாகவே வாழ்ந்தீர்கள் ;”

“யாருக்கும் தலை
வணங்காத நீங்கள்
தரையில் புழுதியில்
படுத்துக்
கொண்டிருக்கிறீர்கள் ;
உலகத்தையே ஆளக்கூடிய
வல்லமை படைத்த
நீங்கள் தரையில் நகர
முடியாமல் இருக்கிறீர்கள் ;”

“:உம்முடைய
அரியணை எங்கே ?
உம்முடைய
வெண்கொற்றக்குடை
எங்கே?
உம்முடைய மாபெரும்
படை எங்கே ?
உம்முடைய வீரமும்
புகழும் எங்கே ?
என்னுடைய
கண்களையே என்னால்
நம்பமுடியவில்லை  ;

வீரம் வீழ்ந்து
கிடக்கிறது ;
வீரம் நகர
முடியாமல் இருப்பதை
என்னால் நம்பவே
முடியவில்லை ;
இளவரசே உங்களுக்கு
நேருக்கு நேராக
நின்று போரிட்டு
வெற்றி பெற
முடியாத போது
உங்களை எப்படி
வீழ்த்தினார்கள் ;”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment