June 24, 2020

அறிய வேண்டியவை-பதிவு-49


            ஜபம்-பதிவு-541
       (அறிய வேண்டியவை-49)

கிருஷ்ணன் :
“அழாதே உத்தரை
இந்த உலகத்தின்
ஆதியும்
இருள் தான்   
அந்தமும்
இருள் தான்
இந்த உலகத்தின்
ஆரம்பமும்
இருள் தான்
முடிவும்
இருள் தான்”

“இந்த உலகமே
இருளால் தான்
சூழப்பட்டிருக்கிறது
ஒளி வந்து விட்டு
செல்வது தான்
ஒளி
நிலையானது அல்ல
ஒளி நிலையாக
இருக்க முடியாது”

“இருளில் ஒளி
இருந்து விட்டுத்
தான் செல்லும்
இருளில் இருக்கும்
ஒளி இருளில்
கரைந்து
இருளாகவே
மாறி விடும்
ஒளி என்று ஒன்று
தனியாக இல்லை
ஒளி இருளில்
வந்து விட்டுச்
செல்வது தான்
ஒளி
நிலையில்லாதது
இருள்
நிலையானது”

“ஒளியை மதிக்கும்
நாம் - இருளை
மதிப்பதே இல்லை
இருளின் மதிப்பு
யாருக்கும்
தெரிவதே இல்லை
இருளின் மதிப்பை
உணர்ந்தவர்கள் தான்
இருளைப்
போற்றுவார்கள்
இருளின்
மதிப்பைப் பற்றித்
தெரியாதவர்கள் தான்
இருளைக் கண்டு
பயப்படுவார்கள்
இருளின் மதிப்பை
உணர்ந்தவர்கள்
இருளிலிருந்து தான்
அனைத்தும்
தோன்றியது
என்பதை
உணர்ந்து
இருப்பார்கள்
பிரபஞ்ச
படைப்பிற்கு
அடிப்படை
காரணமே
இருள் தான்”

“இந்த பிரபஞ்சத்தில்
உள்ள உயிர்கள்
அனைத்தும்
தோன்றியதே
இருளில் தான்
ஏன் தாயின்
கர்ப்பப்பையில்
குழந்தை இருளில்
தான் இருக்கிறது
இருளில் இருந்து
தான் அதன்
பிறப்பே
தோன்றுகிறது
அப்பேற்பட்ட
சிறப்புகள் வாய்ந்த
இருளைப்
பற்றி தவறாக
நினைக்காதே
உத்தரை”

“இருளே
அனைத்திற்கும்
மூலம்
இருளே கடவுள்
எப்போது
உன்னுடைய
வாயிலிருந்து
என்னுடைய
வாழ்க்கை
இருளாகி
விட்டது என்று
சொன்னாயோ
எப்போது
உன்னை
அறியாமல்
இருள் உன்னுடைய
வாழ்க்கையை
சூழ்ந்துவிட்டது
என்று
சொன்னாயோ
இருளின் வடிவமாக
இருக்கும் கடவுள்
உனக்கு துணை
செய்ய வந்து
விட்டார்”

“ஆமாம் நான் உன்
குழந்தைக்கு
உயிர் கொடுக்க
வந்திருக்கிறேன்
உன்னுடைய
குழந்தைக்கு
உயிர் கொடுக்கப்
போகிறேன்”

(கிருஷ்ணன்
இறந்து கிடக்கும்
குழந்தைக்கு
முத்தமிடுகிறார்)

கிருஷ்ணன்:
“எழுந்திரு பரிட்சித்
உறங்கியது
போதும் எழுந்திரு”

(என்று கிருஷ்ணன்
சொன்னவுடன்
இறந்த
குழந்தை
கண்களை
திறந்தது இறந்த
குழந்தை உயிர்
பெற்று  விட்டது)

(கிருஷ்ணன் செய்த
அற்புதத்தைக்
கண்டு
திரௌபதி
சுபத்திரை
உத்தரை
ஆகியோர்
என்ன செய்வது
என்று தெரியாமல்
திகைத்து விட்டனர்
கிருஷ்ணன் இறந்த
குழந்தையை
எழுப்பிய
அதிசயத்தைக்
கண்டு
மெய் மறந்து
இருந்தனர்
கிருஷ்ணன் இறந்த
குழந்தையை
எழுப்பிய செயலால்
ஏற்பட்ட
சந்தோஷத்தின்
மிகுதியால்
நன்றி கூட
அவர்களால்
சொல்ல
முடியவில்லை
அவர்களுடைய
நாவிலிருந்து
வார்த்தை
வெளிப்படவில்லை
கண்களில் இருந்து
ஆனந்தக் கண்ணீர்
மட்டுமே
வெளிப்பட்டது

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment