June 24, 2020

அறிய வேண்டியவை-பதிவு-45


               ஜபம்-பதிவு-537
        (அறிய வேண்டியவை-45)

“பீஷ்மரை நேருக்கு
நேராக கொல்ல
முடியாமல்
சிகண்டியின் பின்னால்
நின்று கொண்டு
அம்பு எய்தவன்
தானே அர்ஜுனன்;
அப்பேற்பட்டவன் தான்
உலகத்திலேயே
சிறந்த வில்லாளி
என்று தன்னை
சொல்லிக் கொண்டு
திரிந்து
கொண்டிருக்கிறான்;
சிகண்டியின் பின்னால்
கோழை போல்
ஒளிந்து கொண்டு
பீஷ்மரைக் கொன்றது
கோழைத்தனம்
இல்லையா?”

“கொல்லவே முடியாத
வீரத்திற்கு உருவமாக
இருந்த கர்ணனை
கர்ணனிடமிருந்த
அனைத்தையும்
பறித்துக் கொண்டு
கர்ணனை
கோழைத்தனமாக
கொன்றீர்களே
அது கோழைத்தனம்
இல்லையா?”

“போர் விதிமுறைகளை
மீறி துரியோதனை
கோழைத்தனமாக
கொன்றீர்களே அது
கோழைத்தனம்
இல்லையா”

“கோழைத்தனமாக
என்ன செயல்களை
எல்லாம் செய்ய
முடியுமோ
அனைத்தையும்
செய்து விட்டு என்னை
கோழை என்கிறீர்கள்”

“என்னை கோழை
என்று சொல்வதற்கு
பாண்டவர்களாகிய
உங்களுக்கு
அருகதை இல்லை”

“பாண்டவர்கள்
குலத்தையே
வேரறுக்கிறேன்”

“என்னுடைய தந்தை
எனக்கு என்ன
சொல்லிக் கொடுத்தார்
என்று
கேட்டாயல்லவா ?
என்னுடைய
தந்தை எனக்கு
என்ன சொல்லிக்
கொடுத்தார் என்று
காட்டுகிறேன் “

(என்று சொல்லிக்
கொண்டு
அஸ்வத்தாமன்
கீழே கிடக்கும்
ஒரு புல்லை எடுத்து
மந்திரங்களை
ஜெபிக்கிறான்
அந்த புல்
பிரம்மாஸ்திரமாக
மாறுகிறது)

அஸ்வத்தாமன் :
“பிரம்மாஸ்திரமே
பாண்டவர்களின்
குலத்தையே
அழித்து விடு “

(அந்த நேரத்தில்
அந்த இடத்திற்கு 
அர்ஜுனனோடு
வந்தார் கிருஷ்ணன்)

கிருஷ்ணன் :
“அர்ஜுனா
பிரம்மாஸ்திரத்தைக்
கற்றவன் நீ !
இது தான் சமயம்
அஸ்வத்தாமனின்
பிரம்மாஸ்திரத்திற்கு
எதிர்
பிரம்மாஸ்திரம் விடு”

(தேரிலிருந்து இறங்கிய
அர்ஜுனன் தனது
வில்லையும்
அம்பையும் எடுத்தான்)

அர்ஜுனன் :
“அஸ்வத்தாமன் என்ன
சொல்லி
பிரம்மாஸ்திரத்தை
விட்டானோ அதற்கு
எதிர் பிரம்மாஸ்திரமாக
இது அமையட்டும்”

(என்று அர்ஜுனன்
அஸ்வத்தாமனின்
பிரம்மாஸ்திரத்திற்கு
எதிர் பிரம்மாஸ்திரம்
விட்டான்
அர்ஜுனனின்
பிரம்மாஸ்திரம்
அஸ்வத்தாமனின்
பிரம்மாஸ்திரத்தை
முறியடிப்பதற்காக
விரைகிறது
இரு சக்தி வாய்ந்த
பிரம்மாஸ்திரங்களினால்
உலகமே அதிர்ந்து
கலகலத்தது;

இதனால்
பூகம்பம் ஏற்பட்டது
கடல்கள் கொந்தளித்தது
எரிமலைகள் ஆவேசமாக
வெடிக்கத் தொடங்கியது
இடி மின்னல்
மழை காற்று
ஆகியவை
வெளிப்பட்டது
வெள்ளம்
பெருக்கெடுத்து ஓடியது
இந்த உலகத்தில்
உள்ள உயிர்கள்
அனைத்தும் நடுங்கியது)

வியாசர் :
“அர்ஜுனா
அஸ்வத்தாமா
மனித குலத்தின் மீது
இந்த பிரம்மாஸ்திரத்தை
இது வரை யாரும்
பயன்படுத்தியதில்லை”

“இந்த பிரபஞ்சத்தையே
அழிக்கக்கூடிய சர்வ
வல்லமை படைத்தவை
இந்த பிரம்மாஸ்திரங்கள்”

“உங்களுடைய குரு
துரோணாச்சாரியார்
உங்களுக்கு இதைத்
தான் கற்றுக்
கொடுத்தாரா?”

“பிரம்மாஸ்திரங்களை
இது போல
தேவையற்ற
விஷயங்களுக்கு
பயன்படுத்தக் கூடாது
என்று உங்களுக்குத்
தெரியாதா
உங்களுடைய
குரு உங்களுக்கு
இதை சொல்லித்
தரவில்லையா
இருவரும்
பிரம்மாஸ்திரங்களைத்
திரும்பப் பெறுங்கள்”

“அர்ஜுனனை
பிரம்மாஸ்திரம் விடும்
படி ஏன் சொன்னாய்
கிருஷ்ணா”


----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment