June 24, 2020

அறிய வேண்டியவை-பதிவு-41


              ஜபம்-பதிவு-533
       (அறிய வேண்டியவை-41)

திருஷ்டத்யும்னன் :
“அஸ்வத்தாமா
என்னை வாளால்
ஒரே வீச்சில்  என்னை
கொன்று விடு என்னை
சித்திரவதை செய்யாதே!”

அஸ்வத்தாமன் :
“என் தந்தையை
கொன்று விட்டு
நிம்மதியாகத்
தூங்குகிறாயா - உனக்கு
நிம்மதியான சாவை
நான் தரமாட்டேன் “

“ஒரு வீரனுக்குரிய
சாவையும் நான்
உனக்குத் தர மாட்டேன்”

“உன்னை சித்திரவதை
செய்து தான் கொல்வேன்”

(என்று சொல்லிக்
கொண்டே கைகளால்
குத்து விட்டும்
காலால் எட்டி
உதைத்தும்
திருஷ்டத்யும்னனைக்
கொன்றான் )

(அஸ்வத்தாமன்
திரௌபதியின்
தம்பியரான
உத்தமௌஜாவையும்,
யுதாமன்யுவையும்
வாளால்
வெட்டிக் கொன்றான் ;

பீஷ்மர் இறப்பிற்குக்
காரணமான சிகண்டி
அஸ்வத்தாமனைக்
கண்டதும் எழுந்து
வந்தான் சிகண்டியின்
தலையை வெட்டி
சிகண்டியைக்
கொன்றான்
அஸ்வத்தாமன் ;

ஒரு கூடாரத்தில்
ஐந்து நபர்கள்
உறங்கிக்
கொண்டிருப்பதைக்
கண்டான்
அஸ்வத்தாமன்
அவர்கள் பாண்டவர்கள்
என்று நினைத்து
ஒரு மந்திரத்தை
ஜெபித்து தனது
வில்லிருந்து
ஒரு பாணத்தை
விடுகிறான் - அது
ஐந்து பாணங்களாக
மாறுகிறது உறங்கிக்
கொண்டிருக்கும்
ஐவரையும்
கொன்று விடுகிறது ;

அலறுகின்றவர்களையும்
ஓடுகின்றவர்களையும் 
விடாது அஸ்வத்தாமன்
துரத்திக் கொண்டு சென்று
ஆட்டுக் குட்டிகளை
வெட்டுவது போல
துரத்தி துரத்தி
சுழன்று சுழன்று
வெட்டிக் கொன்றான் ;

விராடனின் புதல்வர்கள்
துருபதனின் பௌத்திரர்கள்
முதலிய எல்லோரையும்
வாளால் வீசி வெட்டினான் ;

பாஞ்சாலர்கள்
அனைவரையும் கொன்றான் ;

தன்னுடைய வெறி
தீராத காரணத்தினால்
பாண்டவர்களின்
பாசறையில் இருந்த
மிருகங்களையும்
தன்னுடைய
வாளால் கொன்றான் ;

மரணத்தை வழங்க வந்த
மரணதேவனைப்போல
வாளை கையில்
ஏந்திக் கொண்டு
அங்கும் இங்கும்
ஓடி கண்ணில்
பட்ட அனைவரையும்
தன்னுடைய வாளால்
வெட்டிக் கொன்றான் ;

அஸ்வத்தாமனின் கொலை
வெறிக்கு பயந்து
ஓடியவர்கள் மிரண்டு
ஓடிய யானைகளின்
காலில் மிதி
பட்டு இறந்தனர் ;

அந்த இடம்
முழுவதும்
இரத்தம் ஆறாக
பெருக்கெடுத்து ஒடியது ;
மரண ஓலம் அந்த
இடத்தையே அதிர
வைத்தது ஒரே
கூக்குரலும் அழுகையும்
அந்த இடம் முழுவதும்
நிரம்பி இருந்தது  ;

ஒரு மந்திரத்தை
ஜெபித்து தன்னுடைய
வில்லிலிருந்து ஒரு
பாணத்தை விடுகிறான்
அது ஒரு தீ
உருண்டையாக
மாற்றம் அடைந்து
அந்த இடத்தில்
விழுகிறது அந்த
இடம் முழுவதும்
தீப்பிடித்து எரிகிறது ;

அந்த பாசறையில்
இருந்து தப்பிப்
பிழைப்பதற்காக
ஓடியவர்கள் பாசறையை
விட்டு வெளியே
வரும் போது
அவர்களை கிருபரும்
கிருதவர்மாவும்
கொல்கின்றனர் ;

தீப்பற்றி எரிந்து
கொண்டிருக்கும் அந்த
வெளிச்சத்தின்
உதவியினால்
அஸ்வத்தாமன்
பாண்டவர்களின்
பாசறையில் இருந்த
அனைவரையும் கொன்றான் ;

படுகொலைகள்
அனைத்தையும் செய்து
முடித்து விட்டு
அஸ்வத்தாமன் வெளியே
வந்த போது விடிந்து
விட்டிருந்தது இரவு
அந்த பாசறைக்குள்
அஸ்வத்தாமன்
நுழைந்த போது
எந்தவிதமான அமைதி
இருந்ததோ அப்படியே
விடியும் போதும் இருந்தது  ;

விடியற்காலையில்
அஸ்வத்தாமன்
பாண்டவர்கள்
பாசறையை விட்டு
வெளியே வந்த போது
ஒருவரும் இல்லை
என்று சொல்லத்தக்க
விதத்தில் பாசறையில்
இருந்த அனைவரும்
கொல்லப்பட்டு இருந்தனர் )

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment