June 24, 2020

அறிய வேண்டியவை-பதிவு-43


             ஜபம்-பதிவு-535
       (அறிய வேண்டியவை-43)

(திருஷ்டத்யும்னன்
சிகண்டி ஆகியோருடன்
ஐந்து பேருடைய
உடல்கள்
கிடத்தப்பட்டிருந்தன ;
அஸ்வத்தாமன் கொன்றாக
நினைத்துக் கொண்டிருந்த
பாண்டவர்களுடைய
உடல்கள் அல்ல
அவைகள் - அந்த
ஐந்து பேருடைய
உடல்கள் திரெளபதியின்
புத்திரர்களான
பிரதி விந்தியன்,
சுதசோமன். சுருதகீர்த்தி,
சதானிகன். சுருதவர்மன்
ஆகியோருடைய
உடல்கள்
ஐந்து பேருடைய
உடலையும் துளைத்து
நின்று கொண்டிருந்த
பாணங்களைப்
பார்த்துக் கேட்டாள்
திரௌபதி)

திரௌபதி :
“இவை யாருடைய
பாணங்கள் “

அர்ஜுனன் :
“இந்த பாணங்கள் குரு
துரோணாச்சாரியாருடைய
மகன்
அஸ்வத்தாமனுடையது “

திரௌபதி :
“அஸ்வத்தாமனுடைய
தந்தை
துரோணாச்சாரியார்
இரவில் தூங்கிக்
கொண்டிருப்பவர்களைக்
கொல்வது தான்
வீரம் என்று
அவருடைய மகனுக்கு
சொல்லிக் கொடுத்தாரா?”

“போர்க்களத்தில்
நின்று போர் புரிய
தைரியமில்லாதவன் ;
நேருக்கு நேராக
நின்று கொண்டு
போர் செய்ய
தைரியமில்லாதவன் ;
இரவில் இருளில்
உறங்கிக்
கொண்டிருந்தவர்களைக்
கொன்று தான்
பெரிய வீரன்
என்பதை நிரூபிக்க
முயன்று இருக்கிறானா?”

“என்னுடைய
கண்மணிகளைக்
கொன்று இருக்கிறான்;
நான் பெற்றெடுத்த
பாலகர்களை
அழித்து இருக்கிறான்;
பாண்டவர்களுக்கு
வாரிசே இருக்கக்
கூடாது என்று  
இந்த இழிச்
செயலை செய்து
இருக்கிறானா
அல்லது
பாண்டவர்கள்
ஐவரையும்
கொல்வதாக
நினைத்துக் கொண்டு
என்னுடைய
பாலகர்கள்
ஐவரையும்
கொன்று விட்டானா?”

“எது நடந்து
இருந்தாலும் எனக்கு
அஸ்வத்தாமனின்
உயிர் வேண்டும் ;
அவனை பிணமாக
என்னிடம்
கொண்டு வாருங்கள் “

அர்ஜுனன் :
“அஸ்வத்தாமன்
யாராலும் கொல்ல
முடியாதவன்  ;
அஸ்வத்தாமனை
யாராலும்
கொல்ல முடியாது ;
அவன் அமரத்துவம்
பெற்றவன் ;
அவனுக்கு மரணம்
என்பதே கிடையாது ;”

திரௌபதி :
“அஸ்வத்தாமனின்
தலையில்
ஒரு ரத்தினக் கல்
இருக்கிறது என்று
கேள்விப்பட்டேன்
அந்தக் கல் இனி
அவன் தலையில்
இருக்கக் கூடாது  ;
அந்தக் கல்
எனக்கு வேண்டும் ;
அந்தக் கல்லை
என்னிடம் கொண்டு
வந்து தருவீர்களா?”

“அன்பே பீமா
மனிதர்களிலேயே
நீங்கள் தான்
பலசாலி என்பதை
நான் அறிவேன்  ;
துரியோதனனுடைய
தம்பிகளையும்
துரியோதனனையும்
அழித்ததிலிருந்து
உங்கள் வீரத்தை
நான் அறிவேன் ;
நீங்கள் எனக்காக
இந்தச் செயலைச்
செய்ய வேண்டும்
செய்வீர்களா?”

பீமன் :
“உனக்காக இந்தச்
செயலை நான்
செய்கிறேன்  ;
அஸ்வத்தாமன்
இந்த உலகத்தில்
எந்த மூலைக்கு
ஓடி ஒளிந்தாலும்
அவனைக் கண்டு
பிடித்து அவனுடைய
தலையில் இருக்கும்
அந்த இரத்தினக்
கல்லை - உனக்காக
கொண்டு வருவேன்
திரௌபதி
எனக்காகக் காத்துக்
கொண்டிரு “

(என்று சொல்லி
விட்டு நகுலனை
சாரதியாக்கிக்
கொண்டு தேரில்
ஏறி பீமன்
அஸ்வத்தாமனைத்
தேடிப் புறப்பட்டான்)

(அவர்கள் சென்றதும்
கிருஷ்ணன்
தர்மரிடம் கூறினார் )

கிருஷ்ணன் ;
“பீமனை தனியே
அனுப்பியது சரியான
செயல் இல்லை ;
பீமனை தனியே
அனுப்பி
இருக்கக் கூடாது “

“அஸ்வத்தாமனிடம்
பிரம்மாஸ்திரம்
இருக்கிறது அது
இந்த உலகத்தையே
அழிக்கக் கூடிய
ஆற்றல் படைத்தது
பிரம்மாஸ்திரத்தை
பிரம்மாஸ்திரத்தை
கொண்டு தான்
தடுக்க முடியும்
வேறு எந்த ஒரு
ஆயுதத்தாலும்
தடுக்க முடியாது”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment