June 24, 2020

அறிய வேண்டியவை-பதிவு-46


             ஜபம்-பதிவு-538
       (அறிய வேண்டியவை-46)

கிருஷ்ணன் :
“அஸ்வத்தாமன்
தான் முதலில்
பிரம்மாஸ்திரத்தை
விட்டான்
பிரம்மாஸ்திரத்தை
தடுக்க
வேண்டுமானால்
அதற்கு எதிர்
பிரம்மாஸ்திரம்
விடத்தான் வேண்டும்  ;
அதனால் தான் நான்
அர்ஜுனனை எதிர்
பிரம்மாஸ்திரம்
விடச் சொன்னேன் “

வியாசர் :
“அஸ்வத்தாமா
அர்ஜுனா
உங்களுடைய
பிரம்மாஸ்திரங்களைத்
திரும்பப் பெறுங்கள் “

அர்ஜுனன் :
“முனிவரே
பிரம்மாஸ்திரத்தை
நான் - என்னுடைய
சுயமாக
விடவில்லை ;
அஸ்வத்தாமனின்
பிரம்மாஸ்திரத்திற்கு
எதிர்
பிரம்மாஸ்திரமாகத்
தான் விட்டேன் ;
நான் விட்ட எதிர்
பிரம்மாஸ்திரத்தை
திரும்பப் பெறுகிறேன் ;”

(பிரம்மாஸ்திரத்தை
விடுவது மட்டுமல்ல
அதை திரும்பப்
பெறுவதும் கடினம்
பிரம்மாஸ்திரம்
எளிதாக
திரும்பப் பெறும்
ஆயுதமல்ல )

(அர்ஜுனன்
பிரம்மாஸ்திரத்தை
திரும்ப
வரவழைக்கிறான் ;
பிரம்மாஸ்திரம்
அர்ஜுனனிடமே
திரும்ப வந்து
விடுகிறது)

வியாசர்
“அஸ்வத்தாமா
பிரம்மாஸ்திரத்தைத்
திரும்பப் பெறு
பிரம்மாஸ்திரத்தைத்
திரும்பப் பெறாமல்
என்ன செய்து
கொண்டிருக்கிறாய்
அர்ஜுனன்
தன்னுடைய
பிரம்மாஸ்திரத்தைத்
திரும்பப்
பெற்று விட்டான்
நீயும் உன்னுடைய
பிரம்மாஸ்திரத்தை
திரும்பப் பெறு”

அஸ்வத்தாமன் :
“மன்னிக்க வேண்டும்
முனிவரே
பிரம்மாஸ்திரத்தை
செலுத்தும் வித்தை
மட்டுமே
எனக்குத் தெரியும்
பிரம்மாஸ்திரத்தைத்
திரும்பப் பெறும்
வித்தை
எனக்குத் தெரியாது “

வியாசர் :
“முட்டாளே
என்ன காரியம்
செய்து விட்டாய்
எவ்வளவு பெரிய
தவறை
செய்து விட்டாய்
யாரும் செய்யக்கூடாத
செயலைச்
செய்து விட்டாய் “

“பிரம்மாஸ்திரம்
எவ்வளவு
மதிப்பு வாய்ந்தது
என்பது
உனக்குத் தெரியாதா
பிரம்மாஸ்திரத்தின்
மதிப்பை நீ
உணர்ந்திருந்தால் 
இவ்வாறு செய்து
இருக்க மாட்டாய் “

“எந்த ஒரு
வித்தையையும்
முழுமையாகக் கற்றுக்
கொள்ளாமல் அதைப்
பயன்படுத்தக்
கூடாது என்பது
உனக்குத் தெரியாதா
பிரம்மாஸ்திரம்
போன்ற
ஆயுதங்களை
பயன்படுத்தும் போது
அதை
செலுத்துவதற்கும்
திரும்ப அழைத்துக்
கொள்வதற்கும்
தெரியாமல்
பயன்படுத்தக் கூடாது
என்பது
உனக்குத் தெரியாதா
திரும்ப அழைத்துக்
கொள்ளும் வித்தை
தெரியாமல் - அதை
செலுத்தியது நீ
செய்த மிகப்
பெரிய குற்றம் “

“நீ செய்த
செயலால் - இந்த
உலகமே
அழியக்கூடிய நிலை
ஏற்பட்டிருக்கிறது
என்பது
உனக்குத் தெரியாதா
உலகமே
அழிந்து விட்டால்
இந்த உலகத்தை 
மீண்டும்
புதியதாக உருவாக்க
வேண்டும் என்பது
உனக்குத் தெரியாதா “

பாண்டவர்களை
அழித்து விடுவதன்
மூலம்  நீ என்ன
சாதிக்க நினைக்கிறாய்
பாண்டவர்களை
அழிந்து விட்டால்
இந்த உலகத்தில்
தர்மத்தை யார்
நிலை நாட்டுவார்கள்
தர்மத்தின் படி
இந்த உலகத்தை
யார் ஆட்சி
செய்வார்கள்
பாண்டவர்கள்
இல்லாத
உலகத்தில்
தர்மம் எப்படி வாழும்
தர்மத்தை நிலை
நாட்டி தர்மத்தின் படி
ஆட்சி செய்து
வருங்கால
உலகத்தைக் காப்பாற்ற
வேண்டுமானால்
பாண்டவர்கள்
உயிரோடு இருந்து
தான் ஆக வேண்டும் “

“அதனால் நான்
சொல்வதைக் கேள்
பிரம்மாஸ்திரத்தின்
பாதையை மாற்று
பிரம்மாஸ்திரத்தின்
பாதையை மாற்று”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 24-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment